கருவறையில் பெற்ற அவள்
வலி என் முதல் அழுகை...**
தமிழ் கற்காத வயதில்
தாய் மொழி பேசிய
முதல் மொழியாம் அம்மா. .**
தவழ்ந்த உலகில் தவழ்ந்தே கடந்த
என் தாயின் காலடி..**
பர்க்கல் முளைக்காத
சிரிப்போடு அவள் பூன்னகையில்
பேசிகொண்டேன் நான்..**
நிலவை விரல் காட்டி அழைத்த என் தாய் அவள் கையில் ஊட்டிய அமிர்தம் கடந்த பால் சோறு..**
அவள் மடியில் உரங்கிய உறக்கம்
தொலைந்த நான் ..**
அவள் இடுப்பில் அமர்ந்து நடத்திய கள்ள அழுகை நாடகம்.**
அழுவதர்க்கு எனக்குயாரும் கற்று தரவில்லை...**
சிரிப்பதர்க்கு கற்றுக்கொண்டேன் தாயின் அன்பு கல்வியில்...**
தடுமாறி விழுந்தபொதல்லாம்
தடுமாறியது அவள் இதயம்..**
நான் நேசித்த முதல்
பெண் அம்மா..**
என்னை சுவாசித்த முதல் பெண்
அம்மா...**
ஆக்கம்-பிரவீன்-
No comments:
Post a Comment