மரணம் அடையும் மரம் ஒன்று"
ஈர மழையில் என்னை இருகிக்கொள்ளும் முன்னே"
காற்று அடித்து நகர்கிறது கரு மேகங்கள் "
ஒரு துளி நீர் இரங்கி மண்ணில் விழ
என் நிழலும் கொதிமணலாய் மாரியது"
கரு மேகம் உடைந்து விலகிவிட வெயிலின் முகம் பட்டே என் இழைகள் சில கலை இழந்து உதிர்கிறது"
உடைந்த இழைகள் காற்றில் மிதந்தபடியே மண்ணில் விழுந்து உருண்டு உடைகிறது"
என்னிடம் மிஞ்சிருக்கும் எழும்புகளும் மக்கியபடியே
நொருங்கயது "
கண்ணீர் வடிக்க மேகங்களும்
தயாராகயில்லை"
என் வேர் நிரம்புகள் ஒவ்வொன்றாய் நீர் இழந்து விறைத்துப்போனது "
என் வாசம் தொலைத்து நாட்கள் கடந்தேன்
இன்னும் கொஞ்சம் உயிர் மிச்சமிருக்க புயல் அடித்தால் சாய்ந்து மடிவேன்""
ஆக்கம்-பிரவீன்
No comments:
Post a Comment