Tuesday, 8 January 2013

என்னவளுக்காய் ஒரு கவிதை

மயில் இறகை போல் விரித்து ஆடுகிறது உன் இமை இறகுகள்"

எங்கோ ஒரு இடத்தில் இருவரும் மூச்சு காற்று
ஒன்றாய் இனைகிறது"

பூக்களின் அனைத்து வாசங்களும் உன்னிடம் தொலைவிட்டது"

உன் முகவரியில் என் முகவரி தொலைத்துவிட்டேன்"

உன் ரோஜாவின் இதழில் பனி துளி வழிகிறது "

நம் காதல் தொடக்கம் ஒன்றில்
வானங்கள் எல்லைகள் முடியும் "

என் வீட்டு சுவற்றில் உன் பெயர் அறிமுகமாகும்"

இருவருக்கும் ஒன்றாய் பிறந்த காதல் முதல்  பிள்ளையாகும்""

இன்று முதல் என் இதயம் உனக்காய் துடிக்கும் உன் உடலில் என் உயிர் வாழும்"

உன் கண்ணீர் துளிகளில் என் கைரேகை பதிந்திருக்கும்"

என் தாய் மடி சுகமான தூக்கம் உன் மடியிலும் அறிமுகமாகும் "

உன் கன்னங்களில் என் இதழ் முத்தங்கல் என்றும் அழியாத என் இதழ் சத்தங்கள் "

நம் காதல் சுவடுகள் ஒவ்வொன்றும் கால சுவடுகளாகும்"

இப்பிறவியில் உன்னை  காதிலித்தேன்"் எப்பிறவியிலும் உன்னை மட்டுமே காதலிப்பேன் "
ஆக்கம்-பிரவீன்

No comments:

Post a Comment