Wednesday, 23 January 2013

போர்களம்*

போர்களம்"

கணவன் வாள் வீச
போருக்கு புரப்படும்
முன்னே இவளிடம் மணப்போராட்டம்
தொடங்கப்பட்டது'"

அவன் ஆங்கே காற்றில்
வாள்வீசி எதிரியை வீழ்த்தினான் "

இவள் மணப்போரில்
ஒவ்வொரு நொடியும்
வீழ்த்தப்பட்டாள்"

அவன் போர்களத்தில்
மீண்டுவிட்டான் தன்
வீட்டை நோக்கி வெற்றியோடு பயணித்தான்"

இன்றும் ஒருநாள் இவளிடம்
வெள்ளாடை பறிக்கப்பட்டது"

அவன் வருகையை எதிர்பார்த்த
கண்களுக்கு கண்ணீர்
மட்டுமே சாட்சியானது"

ஒவ்வொரு நாளும்
இவளுக்கு சிலுவையானது"

இப்போரில் இவன் ஆயிரம்
பேரை கொன்றுகுவித்கான்"
இப்போரில் இவள் ஆயிரம்
முறைக்கொள்ளப்பட்டாள்"
ஆக்கம்-பிரவீன் —

No comments:

Post a Comment