எங்கள் பள்ளி நினைவுகள்,
இன்று என் பள்ளி நோக்கி பயணக்கிறோம்
என் பள்ளி கதவுகளில்
எங்கள் கைதடம் பதியாமல்
துருப்பிடித்து கிடக்கிறது,
நாங்கள் விளையாடிய
சிறு பாலைவனம் மைதானம்
அமைதியாக மயானம் காக்கிறது *
நாங்கள் நிழல் தங்கிய மரங்கள்
யாருக்காகவோ இன்னும் தன்
நிழல்களை பாதுகாத்து வைத்திருக்கிறது,
நாங்கள் படித்து சென்ற
பள்ளி அறையும்
நான்கு சுவற்றில்
எங்கள் நினைவுகளை பகிர்ந்துகொள்கிறது,
எங்களுக்கு பாடம் நடத்தப்பட்ட
எழுத்து மர பலகையும்
இன்று தூசி படிந்துபடியே தனிமையில் பாடம் நடத்துகிறது,
நாங்கள் அமர்ந்திருந்த
கடைசி மேசை பலகையும் எங்கள்
நினைவுகளை சுமந்தபடியே மக்கிப்போய்விட்டது,
எங்களை விட்டு சென்ற
கடந்த காலம் மீண்டும்
எங்களை மீட்டுக்கொள்ளுமா,
கடிகாரம் முள்ளை சுற்றிப்பார்த்து தெரிந்தே ஏமாற்றம் அடைகிறோம்,
எங்களை கடந்து சென்ற
காலங்களும் சிறிது முன்னோக்கி நகர்ந்து எங்கள் கண்களில் கண்ணீர்
வடித்து செல்கிறது,
-praveen-
No comments:
Post a Comment