ஒவ்வொரு முறையும் நீ அழகாகிக்கொண்டேப்
போகிறாய் ,,
உன்னை ஒவ்வொரு முறையும் என் கண் வழியில் சிலையெடுத்தேன்,
உன் மீது விழும் என் பார்வைகள் ஒவ்வொன்றும் உன்னை சிலையெடுத்த உளியாயிற்று
,
உன்னை பார்வையில் அழகாய் சிலையெடுத்த என் கண் விழிகள் கலைஞனா ,,
இல்லை உன் அழகை என் வழி திரைக்கு பரிசளித்த உன் அழகிற்க்கு நான் ரசிகனா,,
உன் ஒரபார்வையில் வாள் வீசி என்னை கொள்ளாதே ,,
அரை நொடியில் என்னை போர் முனையில் வெல்லாதே ,,
உன்னுடன் வாழும் நொடிகள் போதும் என் ஏழு ஜென்மங்களும் கடந்திருப்பேன் உன்னுடன் விழாத நொடிகள் போதும் அந்த நொடியிலும் நான் இறந்திருப்பேன்
ஆக்கம்-பிரவீன்
்
No comments:
Post a Comment