தாய் தந்த பாசம் ஒன்றில் கண் கலங்கி சென்றனே
நான் கண்ட தெய்வம் என்றால் என் எதிரே நீ அல்லவா,
நீ ஊட்டிய நிலா சோறில் என் அன்பு பசியைத் தீர்த்தவள் நீ அல்லவா ,
்
நான் தூங்கிய பின்பும் கண் முழித்து என்னை ரசித்தவள் நீ அல்லவா ,
நான் கண்ட வேதங்களில் எழுதாத வரிகள் நீ அல்லவா,
எனக்குள்ளே துவங்கிய நூலில் அனைத்து வரிகளிலும் நீ அல்லவா ,
நான் சிந்தும் கண்ணீரிலும் என் வலியை சுமந்த தோழி நீ அல்லவா ,
உனக்காக சிந்தும் கண்ணீரிலும் என் வலியை சுமந்த கண்ணீர்
நீ அல்லவா ,
்
உன் மடி உறக்கத்தின் இடையே கலையாத கனவும் நீ அல்லவா ,
இனி ஒரு பிறவி என்றால் அந்த பிறவியிலும் என் தாயும் நீ அல்லவா ,
ஆக்கம்-பிரவீன்
No comments:
Post a Comment