Wednesday, 20 February 2013

mother poem

முதன் முதலாய் என் தாயிர்க்காக,,,

என்னை பத்து மாதம் சுமந்வளே உன் வயிறு நோகப்பெத்தவளே,

உன் வயிற்றில் கத்தி பாய்த்து
என்னை உயிரோடு மீட்டவளே,

நீ ஊட்டிய நிலா சோறில்
என் பசியெல்லாம் பறந்ததடி

இன்று நினைத்து பார்த்தாலும் என் கண்கள் கூட கலங்குதடி,

உன் மூச்சு காற்றின் இதமான சுடும் என் கன்னத்தில் விழும் சுகமான முத்தமடி,

உன் மார்பில் குடித்த தாய் பால் ருசி  இன்னும் என் நாவில் இனிக்கிதடி

நீ என்னை அடித்த வலியோடு என்னை அனைத்து சுகத்தில் அழுதேனடி,

பள்ளி கூடம் செல்லையில
உன் விரல் பிடித்து நடந்தது அம்மா உனக்கு நினைவிருக்கா,

குச்சி ஐஸ் ருசி பார்க்க உன்னிடம் கள்ள அழுகை
அழுதேனே அம்மா உனக்கு நினைவிருக்கா,

நீ அடுப்படியில் வேலை பார்க்க  உன் இடுப்பில் நான் உட்கார்ந்தது
சுகம் அம்மா உனக்கு நினைவிருக்கா

மரணம் உன்னை நெருங்கயிலும் என்னை தனிமையில் விட மறுத்தாயடி,

உன்னை சுடுகாட்டில் வழி
அனுப்ப எனக்கு கொஞ்சம் கூட மனசு இல்ல,

உன் உடலை எரிக்கையில
என் உயிர் முழுவதும் போகுதடி

நீ வச்ச மீன் குழம்பும்
நீ போன பின்பும் மனக்குதடி,

நீ போய் சேர்ந்த பின்பும் ்
உன் உயிர் என்னுடன் வாழுதடி,

உன் மடியில் படுத்து உருங்க  மீண்டும் என் மடியில் மகளாய் பிறப்பாயோ,

ஆக்கம்-பிரவீன்

என் தோழி ஒருவருக்காக
முதன் முதலாய் நான் எழுதியது,

No comments:

Post a Comment