Monday, 31 December 2012

குழந்தையின் குரல்-6

ஒரு குழந்தையின் அழுகையின்
குரல்-6

என் முத்தான சிரிப்பைக்கான
அம்மா உன் கையில
முத்து முத்தா காயமடி
என் மனசு நோகுமடி..""

பிள்ளையின் பசி தீர்க்க நாள் முலுக்க உழைச்சாயடி ..""

ஒரு துளி பாலுக்கு உன் ரத்தம்
சிந்தி கொடுத்தாயடி
என் பசி தீர்ந்தடி.""

என் உடம்பிர்க்கு புது துனி மாட்ட
பத்து வீட்டில் உழைச்சாயடி.""

என் ஆசை தீர்ந்ததடி
என்ன கான்வென்ட்டில்
சேப்பதர்க்கு நீ கால் நோக
திரிஞ்சாயடி..""

உன் மகனுக்கு புத்தகம் வாங்க உன் புன்னகைய இழந்தாயடி.""

என் மனசு வலிக்குதடி.
என் விரலுக்கு பேனா மாட்ட
உன் கையில கொடாளியடி
என் பேனாவிர்க்கும் கண்ணீரடி .."

என் படிப்பு முடிப்பதர்க்குல்
உன் வாழ்கை முடிந்ததடி
நான் பட்டம் வாங்கையில
நீ பாடையில போறியேடி..""

உன்னை மெத்தையில படுக்கவைக்க
நான் ஒரு கனா கண்டேன் ..""

உன்ன தங்க தட்டுல ஊட்டி விட
நான் ஒரு கனா கண்டேன்..

உனக்கு பட்டு சேலை மாட்டிவிட
நான் ஒரு கனா கண்டேன்..

உனக்கு தங்க சங்கிலி மாட்டிவிட
நான் ஒரு கனா கண்டேன்..

உன் கொண்ட நேரிய
மல்லிகை பூவாயந் நான்
ஒரு கனா கண்டேன்..""

உனக்கு சிங்கபூர் சுத்திக்காட்ட
நான் ஒரு கனா கண்டேன்...

நீ
என்னை விட்டு போகுவேனு ஓரு நாளும் காங்களயே .""

உன்னை சுடுக்காட்டில்
வழி அனுப்ப ஒரு நாளும்
காங்களயே..""
......முடிவு...

No comments:

Post a Comment