Tuesday, 29 January 2013

அம்மா

கவிதையில் பாட்டெழுத,
காகிதத்தில் கவி எழுத,

உன் முகப்புன்னகையை
என் கண்கள் கானலயே,

உன் கண்களில் குலம் குலமாக கண்ணீர் வடிக்க
என் மனசு நோகுதடி,

என் கையெழுத்து அழகாக உன் கைநாட்டிலும் இரத்தமடி ,

நீ கொடுத்து கிழிந்த ரூபாய் நோட்டிலும் உன் வேர்வை துளி மனக்குதடி,

நீ நேத்து வச்ச மீன் குளம்பு பத்து ஊருக்கு மனக்குமடி,

என் ஒத்த விரலில் மோதிரம் மாட்ட உன் மொத்த விரலில் காயமடி,

என்னை புதிய துணியில் அழகு பார்க்க உன் ஒட்டைப்புடைவையில் அரை மாணம்க்கொண்டியெடி,

நான் பட்டப்படிப்பு
முடிக்கையில நீ பட்ட கஷ்டமெல்லாம்  தீருமடி,

நான் பட்டணத்தில்க்குடியேரி பணம் அனுப்பும் முன்னே மரண அழைப்பில்தந்தியாய் வந்தியெடி

நான் கண்ணீரோடு ஊரை் சேரும் முன்னே என் தாய் உடல் விறகு சிறையில் எரிந்துக்கிடக்குதே

இறப்பிலும் அனாதை ஊர்வலம் சென்றாலே்

என்ன வைத்தில் சுமந்த உன்ன உன் கடைசி ஊர்வலத்திலும்்  சுமக்கலயே,

என் வீட்டு மல்லிகை பூ
யாருக்காவது பூக்கட்டும்
என் கண்ணில் பூக்கும் பூ என் தாயிற்க்காக உதிரட்டும்
ஆக்கம்-பிரவீன்

No comments:

Post a Comment