Saturday, 26 January 2013

அழகிய கவிதை

நீல வானில் மையெடுத்து
எவன் வரைந்த சித்திரமோ
இவள்,

உன்னை மழையில்
நனையெடுத்தால் கலையாமல்
களையெடுத்தாய் ,

உன்னை பனி துளியில்
சிலையெடுத்து புள் நுனியில்
நிலைவைத்தேன்,

உன் அழகில் அகப்பட்டே
மழையோடு நனைந்தபடியே உன்
அழகில் கரைந்தேனடி,

பூ மலர்ந்த வரியோடு நீ
மலர்ந்து நடிக்கையில் இடையில்
சொக்கியவன் நானனேன்,

மழையோடு நீ என் மடி சாய்கயில்
மழை துளி உன் இதழில் முத்திமிட
ரோஜாவின் இதழில்
பனித்துளி நினைவெடுத்தேன்
ஆக்கம்-பிரவீன

No comments:

Post a Comment