Tuesday, 8 January 2013

கருவறையில் ஒரு உலகம்

கருவறையில் ஒரு உலகம்

நான் கருவறையில்
சிறை பிடிக்கபட்டு இருக்கிறேன்"

இங்கே இருண்ட
உலகம் சூல்ந்து
கொண்டு இருக்கிறது""

இங்கே விடியலுக்கு சாட்சிகள் இல்லை

நான் இங்கே உறங்கிகொண்டிருக்கிறேன்  நான் இன்னும் விழிக்கவில்லை "

என் கனவின் கதவுகள்  என்னிடமிருந்து இங்கு மறைக்கப்பட்டுவருகிறது"

என் நினைவுகள் இங்கே திருடப்பட்டுவிட்டது "

இங்கே தனிமையான
மிக பெரிய உலகம்
நான் மட்டும் இங்கு தனிமையில் சிறை
பிடிக்கப்பட்டுருக்கிறேன் "

என் தாயின் இதய துடிப்புகள் என் காதில் சத்தாமாக கேட்க்கும் கடிகாரமானது"

இங்கே என் கைரேகை அளிந்துகிடக்கிறது"
என்  கண்கள் பூட்டி பட்டுருக்கிறது"

என் முகவரி இங்கே தொலைந்துகிடக்கிறது"

இங்கே என் உடல் அமைப்பு இன்று வரை வரையபடுகிறது"

என் உணர்வுகள் இன்றுவரை என்னிடம்  பிறக்கபடவில்லை
நாளை நான் விழிக்கபடலாம்""
என் தாயின் முகவரி காணலாம்""
ஆக்கம்-பிரவீன்

No comments:

Post a Comment