எங்கள் கண்களுக்கு கண்ணிரே முதல் நூலானது,
இங்கே வறுமை ஒன்றே செழிப்படைந்திருக்கிறது,
எங்களை ஆட்சி ஆள்வது பசியின் வறுமை,
எங்கள் அனைவரும் கைரேகையும் கோடாலியால் அழிந்த விட்டது,
இங்கே மழை நீரில் கொதிமணலும் இன்றுவரை ஈரம் பதியாமல் இருகிவிட்டது
காற்றிலும் துளி ஈரம் கசியவில்லை,
ஈர சுதைமண் வீசும் வாசம்
நுகர இன்னும் சுவாசக்காற்றை பிடித்து வைத்துள்ளோம்
மேகம் சேர்ந்தால் மழை பிரியும் பூமி நனையும் வறட்சி மறையும்,
ஆக்கம்-பிரவீன்
No comments:
Post a Comment