Wednesday, 13 March 2013

சுனாமி

கடல் அலையோடு கண் இமைத்த விழியோடு..!!
புன்னகை பூத்த இதழ்களோடு கடலில் மிதந்த முத்துபோல்
அலையில்  கைகோர்த்து விளையாடிய இளம்பிஞ்சுகளை,,!!
இறக்கம் இல்லாத அலைகள் பறித்துக்கொணடது,,!!
தாய்மார்கள்
கண்ணீரை ருசித்துச்சென்றது,,!!
கடலோரம் சிப்பிகள் கண்டு
ரசித்த கண்களுக்கு
அன்று புன்னகை மட்டுமே சாட்சியானது.!!
தன் பிள்ளையின் பினங்களை கண்ட
கண்களுக்கு இன்றும் கண்ணீர் மட்டுமே சாட்சியானது,,!!
கருவறையில் சுமந்த பிள்ளைகளை இன்று கல்லறையில் புதைத்து
கலங்கினாலும்
எங்கள் கண்களில் கண்ணீர் குறைவதில்லை,,!!
ஆக்கம்-பிரவீன்

No comments:

Post a Comment