என் விரல் பிடித்தே
எனக்கு நடக்க
கற்றுக்கொடுத்தவள்
என் முதல் தோழி அம்மா,
நான் தாய் மொழி கற்காத
வயதிலும் நான் கற்றுக்கொண்ட
முதல் மொழி அம்மா,,
என் கை பிடித்து எழுத
கற்றுக் கொடுத்த என் முதல் ஆசான் அம்மா,,
நிலவைப் பற்றி அறியாத
வயதிலும் நிலாச்சோறை
அறிய வைத்தவளும்
அம்மா ,,
ஏட்டில் நான் எழுதிய முதல் எழுத்து
( அ ) தமிழுக்கு
அது உயிரெழுத்து
எனக்கு உயிர் கொடுத்த
நான் கற்ற முதல் எழுத்து
(அ)ம்மா
எனக்கும் அவளே உயிரெழுத்து
உலகமே
உள்ளடங்கிய மூன்றெழுத்து அம்மா,,
உன் நெஞ்சில் உறங்கும் சுகம் கலையாமல் இருக்க
எனக்காக தன் இதயத் துடிப்பையே நிறுத்தி வைப்பவளும் அம்மா,
தன் இதயமாகவே என்னை நினைப்பவளும்
அம்மா,,
நான்
உன் இதயம் ஆகவே
நினைக்கிறேன்
அம்மா,
நீ கல்லறையில் சேர்ந்துவிட்டால் மீண்டும் என்னை கருவறையில் சுமந்துவிடு
நான் கல்லறை சேர்ந்தாவது
உன் கருவறையில் வந்தடைகிறேன்
ஆக்கம்-பிரவீன்
No comments:
Post a Comment