கரு மேகங்கள் ஒன்றுக் கூடி
நீல வானத்தையே மறைத்துவிட்டது,,!
சூரியன் வெப்பத்தில் குளிர்ந்ததும் திமிர் பிடித்த
மேகங்கள் தன் கோபத்தை இடியும் மின்னலுமாய்
தணித்துக் கொண்டது ,,!
மேகம் கோபம் தணிய
காற்று அடித்து மேகம்
துளி துளியாய் கண்ணீர் விட்டுக் கலைகிறது ,,!!
காற்றும்
மரங்களில் தெரிந்தே
மோதி செல்ல மரங்கள் எல்லாம்
அழகாய் அசைந்து விடுகிறது,,
காய்ந்த மண்ணில் மழை துளிகள் மோதியதால்
காயந்த மண்கள் எல்லாம்
ஈர சுதிமணலாய்
உறுமாறியது.,
வயலும்
புல்வெளி யாருக்காகவோ
செழிப்பாக விளைந்து விட்டது,,
ஆக்கம்-பிரவீன்
No comments:
Post a Comment