Monday, 31 December 2012

காதல் தோல்வி

காதலியைத் தொலைத்த காதலன்
வாழ்கை....
உன் விழியில்
நான் வாழ்ந்த
காலங்கள் உன்னிடம் தொலைத்த
நேரங்கள் ...
நீ விட்டு சென்ற உலகத்தை நான்
மட்டும் கடக்கிறேன் ...
தொலைந்துப்போன
வானம் நீயின்றி
பிரியும் நிமிடங்கள் ..
உனக்காய் திறந்த இதயம்
இன்று நீயின்றி மூட
மறுகிறதே....!
உனக்காய் காத்திருக்கும்
கதவுகளை உன் நினைவுகள்
தட்டி செல்கிறதே ....!
உனக்காய் எழுதிய பேனாவும்
இன்று நீயின்று எழுதிட
மறுக்கிறதே..!
உனக்காய் எழுதிய
கவிதை எல்லாம்
இன்று நீயின்றி படித்திட
மறுக்கிறதே ..!
உன்னுடன் கடந்த
இடங்கள் எல்லாம்
இன்று நீயின்றி அமைதி காக்கிறதே....!
நீயின்றி கடக்கும் இரவுகள் கூட
இன்று வேகமாய்
விடிந்து செல்கிறதே...!
நீயின்றி நகரும்
பருவங்கள் அனைத்தும்
இன்று நிலைமாரி கிடக்கிறதே ...!.
சுட்டெரிக்கும் சூரியன்
கூட இன்று என்னுடன்
சேர்ந்து குளிர்கிறதே ..!
என்னுடன் தோன்றும் நிலவு கூட வெளிச்சம்
தர மறுக்கிறதே ..!
நீயின்றி தோன்றும் கனவுகள்
எல்லாம்
இன்று நரகமாய்
தோன்றி செல்கிறதே ..!
உன்னை நினைவாள் துடிக்கும்
இதயம்
கூட எனக்கேன்று
நிர்க மறுக்கிறதே ...!
உன் உலகில் நான்
எங்கே தொலைந்தேனோ ...!
கடைசியாக பார்க்கிறேன் என்
முகத்தை பாலடைந்த ஓவியமாய்
தாடி முளைத்து கிடக்குதே.
நீயின்றி வாழும் உயிர்க்குட என்னை
கண்டு வெறுக்குதே ...!
என் காலங்கள் முடியும் நேரங்கல்
வந்தும்
என்னை அழைத்து
செல்ல மறுக்கிறதே .....!
முடிவு ஒன்று வறுவதர்க்கு என்
உள்ளங்கல் ஏங்கி
ஏனோ துடிக்கிறதே ...!

என் உயிர் பரித்திட
எவன் வருவான்
உன் நினைவாய்
சேர்ந்து செல்வேனடி ""
மறு ஜென்மம்
ஒன்று பிறக்கவேண்டாம்
மறுபடியும்
உன்னை இழக்கவேண்டாம் ..
முடியும் நேரத்தில் முடிக்கிறேன்....ஆக்கம்""பிரவீன்

No comments:

Post a Comment