Monday, 31 December 2012

தாயின்-குரல்

எழுத படிக்க
தெரியாதவள் ....
அவள் கருவறையில்
வெளிச்சமில்லை
அவள் வாழ்விலும்
வெளிச்சமில்லை ...!
அவளுக்கு துன்பங்கள்
கொடுத்து பிறந்தவனோ ..!
நான் காய்ந்த பூமியில்
விதைந்தவனோ...!

அவள்
புன்னைகயை தொலைத்தவளோ..
அவள்
புன்னைகையை கண்டதில்லை ...
என்னை விதைத்தவனையும்
நான் கண்டதில்லை .."
என் தாயின் பசிக்கு
பஞ்சமில்லை..."
உன் பசியோடு என்
பசியை தீர்த்தவளே ..!
உன் அன்பிர்க்கு
பஞ்சமில்லை ...
நான் பள்ளியிர்க்கு
சென்றதில்லை

உடுத்த
உடையின்றி அழைகிறேன்.....

என்
தாயின் புடவையில்
ஒட்டைக்கு குறைவு இல்லை.."
எங்கள்
ஏக்கங்களுக்கு
அளவு இல்லை...."

நான் மழையில் நனையாமல்
இருக்க உன் புடைவையை குடையாய் விரித்தவளே ....!
நீ மழையில் நனைகையில் என்
மணம் துடிக்கிறதே..!
குருவிக்கும் கூடு உண்டு
எங்களுக்கு வீடு உண்டா ...
அம்மா எனக்கு
இன்று பணம்
உண்டு அன்று உடுப்பதர்க்கு
உடையுண்டா ..!
இன்று உடுப்பதர்க்கு
உடையுண்டு அன்று நமக்கு உணவுண்டா....!
என் தாயின்
அழுகையின் குரல்
இன்றும் என் காதில்
ஒளிக்கிறது..."
இன்று ஆயிரம்
உறவுண்டு அம்மா
என்று அழைத்திட
நீ உண்டா ...!
என் தாயின் அழுகையின் குரல் என் காதில் ஓளிக்கட்டும் ..
என் கண்ணீரில் பூக்கும்
பூ அவளுக்கென்று பூக்கட்டும்...
...ஒரு தாயின் அழுகையின்
குரல் ...

ஆக்கம்-பிரவீன்

No comments:

Post a Comment