Sunday, 7 April 2013

தாய் நாடு

எங்கள் தாய்
நாடு எல்லை
காக்க ,

எதிரியின் துப்பாக்கி தோட்டாக்களை
ஒவ்வொன்றையும்
எங்கள் தோள்ப்பட்டைகள்
எண்ணிப்பார்கிறது
ஒவ்வொரு
தோட்டாக்களும்
எங்களுக்கு
பதக்கமாகிறது ..

எங்கள்  இரத்தத்
துளிகளை
எதிரிகளின்
தோட்டாக்களும்
குண்டுகளும்
ருசித்துச்
செல்கிறது,, ்

எங்கள் பாரத
பூமியில்
பூக்களும்
சுதந்தரமாகப் பூப்பதற்காகவே
இங்கே ஒவ்வொரு இந்தியனின்
உயிர்களும் பறிக்கபடுகிறது

இங்கே சக
நண்பனின் இழப்பும்
பினங்களின்
எண்ணிக்கையும் அதிகாமாக
இருக்கலாம்  ,,

(ஆனால் )

நம் தாய் 
நாட்டிற்காக
உயிர்   கொடுத்தேன் என்று என் நெஞ்சும் கொஞ்சம்
அதிகமாகவே கர்வம் கொள்கிறது,,

இங்கே எங்கள்
கண்களுக்கு அழுவதற்க்கு
தாராளமாக
கண்ணீர்  இருந்தாலும்,,

இங்கே
புன்னகைக்க
எங்கள்
இதழ்களுக்கு
கண்ணீர் கூட
தடைவிதித்தாலும்,

எங்கோ ஒரு
இடத்தில் எங்களுக்கும்
சேர்தே ஒர்  குழந்தை
சுதந்திரமாய்
புன்னகைக்கிறது ,,

எங்கள் மூச்சு காற்றை
நாங்கள் இழந்தாலும்
எங்களுக்கும் சேர்த்தே அங்கே சுதந்திரக் காற்று சுவாசிக்கபடுகிறது,

இருப்பதோ
ஒரு உயிர்
அதையும் என் தாய்
நாட்டிற்க்காக
இழந்துவிட்டோம்,

மீண்டும் ஒரு பிறப்பெடுத்தால்
என் தாய் நாட்டிற்காக
மீண்டும் என்
உயிர் பெருமையுடன்
போகட்டும்,

எங்களுக்கு உங்கள் கண்ணீர் வேண்டாம்
எல்லை காக்க எண்ணிக்கையில் நீயும் ஒருவராய் இரு,,

ஆக்கம்-பிரவீன்

No comments:

Post a Comment