சுதந்திரம் கொடுப்பதற்கு 1947 முன்னாள்
ஒரு சிறிய படைப்பு
இங்கு எங்கள் தாய் மண் இதோ இவனுக்கு
அடிமைப்பட்டிருக்கிறது.,
வெள்ளையனின்
வெறி அடங்க எங்கள் முதுகு தோள் உரித்துப்
பார்க்கப்படுகிறது,,
இன்றும் ஒரு நாள் இவர்களுக்கே
அடிமையானது
எங்கள் பாரதப் பூமி,
வெள்ளையனே
உன் துப்பாக்கி குண்டுகள் இடம்பெற
எங்கள் நெஞ்சில் இன்னும் இடமிருக்கிறது துளைத்துச்
செல் ,,
உன் சிறைச்சாலையில்
எனக்கும் ஒரு
இடமிருந்தால்
என்னையும் அங்கு
இழுத்துச் செல்,
ஏ வெள்ளையனே
உனக்கும் சேர்தே
எங்கள் பாரத
பூமியில் காற்று வீசப் படுகிறது சுவாசித்துக்கொள்,,
என்னையும் உந்தன் மனித
பலியில் கணக்கிட மறந்துவிடாதே
ஆனால் நான்தான் கடைசியாக இருப்பேன் என்று மட்டும்
உறுதிக்கொடு,,
எங்களுக்கு சுதந்திரம் வேண்டாம் எங்கள் சந்ததிகளுகாவது
விடுதலைக்
கொடுத்துவிடு,,
இதோ
இங்கே காற்று ரத்த வாடையோடு வீசிக்கொண்டுருக்கிறதே,
இங்கே
பசுமைகளும்
ரத்தம் மழையில் செழிப்படைந்திவிட்டது,
பிஞ்சுக் குழந்தைகளுக்கும் நாளை விடியலும் விடிந்தும்
விடியாமல்
விடுகின்றதே,
ஏ வெள்ளையனே
வேண்டாம்
இதோ எங்கள் பச்சை பூமியில் எங்களை
கொன்று விதைக்காதே
முளைத்து வருவோம்
எங்கள் பசுமை பூமியில்
உனக்கும் சேர்தே
விதைவிதைத்தோம்
உனக்கும் சேர்த்தே
அறுவடை செய்கிறோம்,
வேண்டாம் வெள்ளையனே
வேண்டாம் அனைத்தையும் அடிமைப்படித்திவிடலாம்
என்று இறுதியில் ஏமாற்றம் காணதே, ,
இன்றும் ஒரு நாள் உனக்கே
அடிமையாகிறோம்
நாளை எங்களுக்கான
விடியல்
நேற்று இப்படிதான்
விடியல் இன்றும் இப்படியே
விடிந்தது
நாளையாவது
சுதந்திரக் காற்று சுதந்திரமாக
நமக்காக வீசட்டும்,,
ஆக்கம்-பிரவீன்
No comments:
Post a Comment