Monday, 10 June 2013

Nee ennai marakkum

நீ என்னை மறக்கும்
நொடி எல்லாம் நான் மரணப் படுக்கையில் செல்கிறேன்,,'*்

என் மரணப் படுக்கையிலும்
கூட உன் நினைவுகள் கொள்கிறேன் ..'*

உன் காதல் பொய்யானதால்
என் உயிர் போனதடி..'*

என் உயிர் போனாலும் கூட உன்மேல்
கொண்ட காதல்
போகாதடி..'*

ஆக்கம்-பிரவீன்

Tuesday, 7 May 2013

love is great feel

என் இரு விழிகளுக்கிடையே
கருவிழியில்  சிக்குக்கொண்டது உன் அழகிய பிம்பங்கள்,, !!

கண் இமைகள் மூடினாலும் என் கனவுகள் உன்னிடம் தொலைந்தாலும்,,!!

இரவும் பகலும் என் நினைவுகள் உன் உலகில் கைதியடி,,

உன்னை கண்ட நாள் முதலாய் உன்னிடம் நான் இன்றுவரை அடிமையடி,,!! ்

விடுதலை ஒன்று கொடுத்து விடு இல்லை விடைக்கொடுத்து சென்றுவிடு உயிரோடு கொன்று என்னை எங்கு புதைத்தாயடி,,!!

என் இதயம் துடிக்கிதே
பெண்ணே,,
என் இதயம் துடிப்பிலும்
பெண்ணே ,,

அந்த பெண்தானோ
நீயென்றுச்
சொல்லுவிடு,,

உன்னிடம் வாழ்ந்தாள் ஒரு நொடிப்போதும்
ஒரு ஜென்மம் வாழ்க்கை மொத்தமாய் தீரும்,,

இந்த ஒரு பிறவி  உன்னிடம் வேண்டும்
காதலனாய் உன்னை சுற்றி வலம்வரவேண்டும்,,!!

ஆக்கம்-பிரவீன்

Sunday, 28 April 2013

அன்பு


அன்பு ஒன்றில் போட்டியிட்டால்
எத்தகைய வீரனும்
கோழையாவன் ,,*
அன்பு ஒன்றால்
போட்டியிட்டவன்
அவன்
கோழையானலும்
வெற்றி காண்பான்,*
ஆக்கம்-பிரவீன்

NoT TRUE

என் மொத்த உயிரையும்த்  எனக்கே  தெரியாமல் அவள் கண்ணீர் ஒன்றில் அடைத்துவிட்டாள்,,*

அதனால்தான் என்னமோ
அவள் ஒரு துளி கண்ணீர் சிந்தினாலும் கூட என் மொத்த உயிரேப் போய்விடுகிறது,,*
ஆக்கம்-பிரவீன்

Tuesday, 16 April 2013

sweet baby line

பூவிதழ் மேனி கொண்டு பால் மணம் கமழும்
உன் மீது என்
ஆசைகள் அடக்கி முத்தமிட்டேன்,,

உன் பிஞ்சு விரல்களில்
கொஞ்சி விளையாட
காற்றும்
சிறு பிள்ளையாக அனுப்பி வைத்தேன்,,

நிலவுடைந்த
முகத்தோடு
அலங்கரித்த
சிரிப்போடு
பூ மலரும் அழகையும்    உன் மீது கண்டு ரசித்தேன்
ஆக்கம்-பிரவீன்

அம்மா

என் விரல் பிடித்தே
எனக்கு நடக்க
கற்றுக்கொடுத்தவள்
என் முதல் தோழி அம்மா,

நான் தாய் மொழி கற்காத
வயதிலும் நான் கற்றுக்கொண்ட
முதல் மொழி அம்மா,,

என் கை பிடித்து எழுத
கற்றுக் கொடுத்த என் முதல் ஆசான் அம்மா,,

நிலவைப் பற்றி அறியாத
வயதிலும் நிலாச்சோறை
அறிய வைத்தவளும்
அம்மா ,,

ஏட்டில் நான் எழுதிய முதல் எழுத்து
( அ ) தமிழுக்கு
அது உயிரெழுத்து

எனக்கு உயிர் கொடுத்த
நான் கற்ற முதல் எழுத்து
(அ)ம்மா
எனக்கும் அவளே உயிரெழுத்து

உலகமே
உள்ளடங்கிய மூன்றெழுத்து அம்மா,,

உன் நெஞ்சில் உறங்கும் சுகம் கலையாமல் இருக்க
எனக்காக தன் இதயத் துடிப்பையே நிறுத்தி வைப்பவளும் அம்மா,

தன் இதயமாகவே என்னை நினைப்பவளும்
அம்மா,,

நான்
உன் இதயம் ஆகவே
நினைக்கிறேன்
அம்மா,

நீ கல்லறையில் சேர்ந்துவிட்டால் மீண்டும் என்னை கருவறையில் சுமந்துவிடு

நான் கல்லறை சேர்ந்தாவது
உன் கருவறையில் வந்தடைகிறேன்
ஆக்கம்-பிரவீன்

Friday, 12 April 2013

un swaasam

உன் சுவாசக்
காற்றில் என் உயிரை அடைத்துவைத்தேன்

என் சுவாசக் காற்றில்
உன் உயிரையும் வாழவைத்தேன்

ஆந்த  உயிரின்
வழியாக நாம் இருவருமே வாழ்ந்து விடுவோம்,,
ஆக்கம்-பிரவீன்