Sunday, 28 April 2013

அன்பு


அன்பு ஒன்றில் போட்டியிட்டால்
எத்தகைய வீரனும்
கோழையாவன் ,,*
அன்பு ஒன்றால்
போட்டியிட்டவன்
அவன்
கோழையானலும்
வெற்றி காண்பான்,*
ஆக்கம்-பிரவீன்

NoT TRUE

என் மொத்த உயிரையும்த்  எனக்கே  தெரியாமல் அவள் கண்ணீர் ஒன்றில் அடைத்துவிட்டாள்,,*

அதனால்தான் என்னமோ
அவள் ஒரு துளி கண்ணீர் சிந்தினாலும் கூட என் மொத்த உயிரேப் போய்விடுகிறது,,*
ஆக்கம்-பிரவீன்

Tuesday, 16 April 2013

sweet baby line

பூவிதழ் மேனி கொண்டு பால் மணம் கமழும்
உன் மீது என்
ஆசைகள் அடக்கி முத்தமிட்டேன்,,

உன் பிஞ்சு விரல்களில்
கொஞ்சி விளையாட
காற்றும்
சிறு பிள்ளையாக அனுப்பி வைத்தேன்,,

நிலவுடைந்த
முகத்தோடு
அலங்கரித்த
சிரிப்போடு
பூ மலரும் அழகையும்    உன் மீது கண்டு ரசித்தேன்
ஆக்கம்-பிரவீன்

அம்மா

என் விரல் பிடித்தே
எனக்கு நடக்க
கற்றுக்கொடுத்தவள்
என் முதல் தோழி அம்மா,

நான் தாய் மொழி கற்காத
வயதிலும் நான் கற்றுக்கொண்ட
முதல் மொழி அம்மா,,

என் கை பிடித்து எழுத
கற்றுக் கொடுத்த என் முதல் ஆசான் அம்மா,,

நிலவைப் பற்றி அறியாத
வயதிலும் நிலாச்சோறை
அறிய வைத்தவளும்
அம்மா ,,

ஏட்டில் நான் எழுதிய முதல் எழுத்து
( அ ) தமிழுக்கு
அது உயிரெழுத்து

எனக்கு உயிர் கொடுத்த
நான் கற்ற முதல் எழுத்து
(அ)ம்மா
எனக்கும் அவளே உயிரெழுத்து

உலகமே
உள்ளடங்கிய மூன்றெழுத்து அம்மா,,

உன் நெஞ்சில் உறங்கும் சுகம் கலையாமல் இருக்க
எனக்காக தன் இதயத் துடிப்பையே நிறுத்தி வைப்பவளும் அம்மா,

தன் இதயமாகவே என்னை நினைப்பவளும்
அம்மா,,

நான்
உன் இதயம் ஆகவே
நினைக்கிறேன்
அம்மா,

நீ கல்லறையில் சேர்ந்துவிட்டால் மீண்டும் என்னை கருவறையில் சுமந்துவிடு

நான் கல்லறை சேர்ந்தாவது
உன் கருவறையில் வந்தடைகிறேன்
ஆக்கம்-பிரவீன்

Friday, 12 April 2013

un swaasam

உன் சுவாசக்
காற்றில் என் உயிரை அடைத்துவைத்தேன்

என் சுவாசக் காற்றில்
உன் உயிரையும் வாழவைத்தேன்

ஆந்த  உயிரின்
வழியாக நாம் இருவருமே வாழ்ந்து விடுவோம்,,
ஆக்கம்-பிரவீன்

love line

நீ கொண்ட வெட்கத்தால்  உன் இதழ் ஓரம் பூக்கின்ற
புன்னகையில்தான்,,்
நானும்
அதில் வசப்பட்டு
அவ்வப்போது
சில நொடிகளிடம்
என் ஆண்மை
தொலையாமல்
பெண்மையின் வெட்கம் அடைகின்றேன்,,
ஆக்கம்-பிரவீன்

Thursday, 11 April 2013

நினைவுகள்

உயிராக
நினைத்த
என்னை
நீ பிரிந்து
சென்றதால்,,

உயிரே இல்லாத
உன் நினைவுகள்
என்னை பிரியாமல் கொல்லுன்கிறது, ,
ஆக்கம்-பிரவீன்

Wednesday, 10 April 2013

காதல் கவிதை

உன்னுடன் சிக்கிக்கொண்ட
நொடிகளில்தான் நான் சொர்க்கம் கடந்து பயணம் கொள்கிறேன்,,
நான் உன்னிடன் மட்டும் தான் சில நொடிகளிலேயே
கரைந்து போகிறேன்
ஆக்கம்-பிரவீன்

Sunday, 7 April 2013

தாய் நாடு

எங்கள் தாய்
நாடு எல்லை
காக்க ,

எதிரியின் துப்பாக்கி தோட்டாக்களை
ஒவ்வொன்றையும்
எங்கள் தோள்ப்பட்டைகள்
எண்ணிப்பார்கிறது
ஒவ்வொரு
தோட்டாக்களும்
எங்களுக்கு
பதக்கமாகிறது ..

எங்கள்  இரத்தத்
துளிகளை
எதிரிகளின்
தோட்டாக்களும்
குண்டுகளும்
ருசித்துச்
செல்கிறது,, ்

எங்கள் பாரத
பூமியில்
பூக்களும்
சுதந்தரமாகப் பூப்பதற்காகவே
இங்கே ஒவ்வொரு இந்தியனின்
உயிர்களும் பறிக்கபடுகிறது

இங்கே சக
நண்பனின் இழப்பும்
பினங்களின்
எண்ணிக்கையும் அதிகாமாக
இருக்கலாம்  ,,

(ஆனால் )

நம் தாய் 
நாட்டிற்காக
உயிர்   கொடுத்தேன் என்று என் நெஞ்சும் கொஞ்சம்
அதிகமாகவே கர்வம் கொள்கிறது,,

இங்கே எங்கள்
கண்களுக்கு அழுவதற்க்கு
தாராளமாக
கண்ணீர்  இருந்தாலும்,,

இங்கே
புன்னகைக்க
எங்கள்
இதழ்களுக்கு
கண்ணீர் கூட
தடைவிதித்தாலும்,

எங்கோ ஒரு
இடத்தில் எங்களுக்கும்
சேர்தே ஒர்  குழந்தை
சுதந்திரமாய்
புன்னகைக்கிறது ,,

எங்கள் மூச்சு காற்றை
நாங்கள் இழந்தாலும்
எங்களுக்கும் சேர்த்தே அங்கே சுதந்திரக் காற்று சுவாசிக்கபடுகிறது,

இருப்பதோ
ஒரு உயிர்
அதையும் என் தாய்
நாட்டிற்க்காக
இழந்துவிட்டோம்,

மீண்டும் ஒரு பிறப்பெடுத்தால்
என் தாய் நாட்டிற்காக
மீண்டும் என்
உயிர் பெருமையுடன்
போகட்டும்,

எங்களுக்கு உங்கள் கண்ணீர் வேண்டாம்
எல்லை காக்க எண்ணிக்கையில் நீயும் ஒருவராய் இரு,,

ஆக்கம்-பிரவீன்

Saturday, 6 April 2013

India poem 19947

சுதந்திரம் கொடுப்பதற்கு 1947 முன்னாள்

ஒரு சிறிய படைப்பு

இங்கு எங்கள் தாய் மண் இதோ இவனுக்கு
அடிமைப்பட்டிருக்கிறது.,

வெள்ளையனின்
வெறி அடங்க எங்கள் முதுகு தோள் உரித்துப்
பார்க்கப்படுகிறது,,

இன்றும் ஒரு நாள் இவர்களுக்கே
அடிமையானது
எங்கள் பாரதப் பூமி,

வெள்ளையனே
உன் துப்பாக்கி குண்டுகள் இடம்பெற
எங்கள் நெஞ்சில்  இன்னும் இடமிருக்கிறது துளைத்துச்
செல் ,,

உன் சிறைச்சாலையில்
எனக்கும் ஒரு
இடமிருந்தால்
என்னையும் அங்கு
இழுத்துச் செல்,

ஏ வெள்ளையனே
உனக்கும் சேர்தே
எங்கள் பாரத
பூமியில் காற்று வீசப் படுகிறது சுவாசித்துக்கொள்,,

என்னையும் உந்தன் மனித
பலியில்  கணக்கிட மறந்துவிடாதே
ஆனால் நான்தான் கடைசியாக  இருப்பேன் என்று மட்டும்
உறுதிக்கொடு,,

எங்களுக்கு சுதந்திரம் வேண்டாம் எங்கள் சந்ததிகளுகாவது
விடுதலைக்
கொடுத்துவிடு,,

இதோ
இங்கே காற்று ரத்த வாடையோடு வீசிக்கொண்டுருக்கிறதே,

இங்கே
பசுமைகளும்
ரத்தம் மழையில் செழிப்படைந்திவிட்டது,

பிஞ்சுக் குழந்தைகளுக்கும் நாளை விடியலும் விடிந்தும்
விடியாமல்
விடுகின்றதே,

ஏ வெள்ளையனே
வேண்டாம்
இதோ எங்கள் பச்சை பூமியில் எங்களை
கொன்று விதைக்காதே
முளைத்து வருவோம்

எங்கள் பசுமை பூமியில்
உனக்கும் சேர்தே
விதைவிதைத்தோம்
உனக்கும் சேர்த்தே
அறுவடை செய்கிறோம்,

வேண்டாம் வெள்ளையனே
வேண்டாம் அனைத்தையும் அடிமைப்படித்திவிடலாம்
என்று இறுதியில் ஏமாற்றம் காணதே, ,

இன்றும் ஒரு நாள் உனக்கே
அடிமையாகிறோம்

நாளை எங்களுக்கான
விடியல்

நேற்று இப்படிதான்
விடியல்  இன்றும் இப்படியே
விடிந்தது
நாளையாவது
சுதந்திரக் காற்று சுதந்திரமாக
நமக்காக வீசட்டும்,,

ஆக்கம்-பிரவீன்

Friday, 5 April 2013

roja

உன் அழகின் வசம் கண்டு உன் கூந்தலில்
நான் அறிமுகமானேன்
நாளை என்னை எரிந்து விடாதே
நான் வாடி உதிர்ந்து
விடுவேன்,,!!
இப்படிக்கு ரோஜா

ஆக்கம்-பிரவீன்

Thursday, 4 April 2013

nice quotes

உன் விழிகள் ஒன்று போதும் என்னை வலி
இல்லாமல் கொல்வதற்கு ,!
உன் இதயம் ஒன்று போதும் நான் கல்லறையானலும்
புதைவதற்க்கு,,!!
ஆக்கம்-பிரவீன்

Wednesday, 3 April 2013

Rain.!!

கரு மேகங்கள் ஒன்றுக் கூடி
நீல வானத்தையே மறைத்துவிட்டது,,!

சூரியன் வெப்பத்தில் குளிர்ந்ததும் திமிர் பிடித்த
மேகங்கள் தன் கோபத்தை இடியும் மின்னலுமாய்
தணித்துக் கொண்டது ,,!

மேகம் கோபம் தணிய
காற்று அடித்து மேகம்
துளி துளியாய் கண்ணீர் விட்டுக் கலைகிறது ,,!!

காற்றும்
மரங்களில் தெரிந்தே
மோதி செல்ல மரங்கள்  எல்லாம்
அழகாய் அசைந்து விடுகிறது,,
காய்ந்த மண்ணில் மழை துளிகள் மோதியதால்

காயந்த மண்கள் எல்லாம்
ஈர சுதிமணலாய்
உறுமாறியது.,

வயலும்
புல்வெளி யாருக்காகவோ
செழிப்பாக விளைந்து விட்டது,, 

ஆக்கம்-பிரவீன்

உன் விழியில்

உன் விழியில் நான்

பல முறை

சிறையடைந்திருக்கிறேன்

இன்று வரை  உன்னிடம்

விடுதலைக் கேட்டதில்லை

விடுதலைக் கொடுக்க

நீயும் விரும்பியதில்லை,,!!

விடையில்லாத

நம் காதலுக்கு

விடையானது

மௌனம் மட்டும்தான்

ஆக்கம்-பிரவீன்

Monday, 1 April 2013

மௌனம்.!

நான் கற்றுக்கொண்ட
தாய் மொழியைக் கூட
மறந்து விடுகிறேன்
உன் அருகே நான் நெருங்கிய போதெல்லாம் ,,!
யாரிடம்தான்
கற்றுக் கொண்டேனோ
சில நொடிகள் உன்னிடம் நான் மௌனமாகிறேன்,,
மௌனமாய்
என்னை ஆக்கிரமிக்காதே பெண்ணே,,
உன்னையும் மௌனம் ஆக்கரமித்துவிட்டது,
ஆக்கம்-பிரவீன்

தோள் சாய்ந்து

உன் தோள்
சாய்ந்து உறங்கும் நேரங்களில்தான் நான் தொலைந்துப்போகிறேன்,!!
உன்  இதயத் துடிப்பை
கேட்கும்போழுதான்
அதில் என்னை உணர்ந்துக்கொள்கிறேன்.,!!
ஆக்கம்-பிரவீன்

penney ..!!

பெண்ணே
உன் விழியால்
என்னை தேடாதே,,!!
உன் விழியில் என்னை தேடிப்பார்
உன் விழியாய்
நானே  இருக்கிறேன்,,!!
ஆக்கம்-பிரவீன்