Tuesday, 29 January 2013

அம்மா

கவிதையில் பாட்டெழுத,
காகிதத்தில் கவி எழுத,

உன் முகப்புன்னகையை
என் கண்கள் கானலயே,

உன் கண்களில் குலம் குலமாக கண்ணீர் வடிக்க
என் மனசு நோகுதடி,

என் கையெழுத்து அழகாக உன் கைநாட்டிலும் இரத்தமடி ,

நீ கொடுத்து கிழிந்த ரூபாய் நோட்டிலும் உன் வேர்வை துளி மனக்குதடி,

நீ நேத்து வச்ச மீன் குளம்பு பத்து ஊருக்கு மனக்குமடி,

என் ஒத்த விரலில் மோதிரம் மாட்ட உன் மொத்த விரலில் காயமடி,

என்னை புதிய துணியில் அழகு பார்க்க உன் ஒட்டைப்புடைவையில் அரை மாணம்க்கொண்டியெடி,

நான் பட்டப்படிப்பு
முடிக்கையில நீ பட்ட கஷ்டமெல்லாம்  தீருமடி,

நான் பட்டணத்தில்க்குடியேரி பணம் அனுப்பும் முன்னே மரண அழைப்பில்தந்தியாய் வந்தியெடி

நான் கண்ணீரோடு ஊரை் சேரும் முன்னே என் தாய் உடல் விறகு சிறையில் எரிந்துக்கிடக்குதே

இறப்பிலும் அனாதை ஊர்வலம் சென்றாலே்

என்ன வைத்தில் சுமந்த உன்ன உன் கடைசி ஊர்வலத்திலும்்  சுமக்கலயே,

என் வீட்டு மல்லிகை பூ
யாருக்காவது பூக்கட்டும்
என் கண்ணில் பூக்கும் பூ என் தாயிற்க்காக உதிரட்டும்
ஆக்கம்-பிரவீன்

Monday, 28 January 2013

காதல் தோல்வி

உன் மௌனத்தாள் என் இதயத்தை நிறித்துவிடாதே எனென்றாள் என் இதயம் ஒவ்வொரு நொடியிலும் உனக்கும் சேர்த்தே துடிக்கிறது,
என் இதயம் நின்றுவிட்டாள் உன் நினைவுகளும் நின்றுவிடும்,
ஆக்கம்-பிரவீன், ்

Sunday, 27 January 2013

காதல் கவிதை

என் இதயத்தில் உன் காதல் மாறி மாறிஒளிபரப்பாகிறது.

காற்றின் வழியாக உன் சுவாசக்காற்று என் சுவாசக்குழாயில் வாசித்து செல்கிறது,

என் இதய துடிப்பில் கழியும் நொடிகளும் உன் பெயரை உச்சரித்தே முடிந்துவிடுகிறது,,

உன் விழியில் போர்க்களம் துவங்கியே ஒருவனுக்கு மட்டும் கத்தியின்றி இரத்தமின்றி ஆயிரம் முறை கொள்ளபடுகிறான்,
ஆக்கம்-பிரவீன்

Saturday, 26 January 2013

அழகிய கவிதை

நீல வானில் மையெடுத்து
எவன் வரைந்த சித்திரமோ
இவள்,

உன்னை மழையில்
நனையெடுத்தால் கலையாமல்
களையெடுத்தாய் ,

உன்னை பனி துளியில்
சிலையெடுத்து புள் நுனியில்
நிலைவைத்தேன்,

உன் அழகில் அகப்பட்டே
மழையோடு நனைந்தபடியே உன்
அழகில் கரைந்தேனடி,

பூ மலர்ந்த வரியோடு நீ
மலர்ந்து நடிக்கையில் இடையில்
சொக்கியவன் நானனேன்,

மழையோடு நீ என் மடி சாய்கயில்
மழை துளி உன் இதழில் முத்திமிட
ரோஜாவின் இதழில்
பனித்துளி நினைவெடுத்தேன்
ஆக்கம்-பிரவீன

காதல் கவிதை

என்னோடு தொன்றும்
ஒவ்வொரு வருடங்கள்
உன்னோடு கரையும்
ஒவ்வொரு நிமிடங்கள் ,

உன்னோடு வாழும்
ஒவ்வொரு நிமிடங்கள் நான்
கரைகிறேன்
ஒவ்வொரு நொடியிலும்,
ஆக்கம்-பிரவீன

ѕcнσσℓ ℓιƒє

எங்கள் பள்ளி நினைவுகள்,

இன்று என் பள்ளி நோக்கி பயணக்கிறோம்
என் பள்ளி கதவுகளில்
எங்கள் கைதடம் பதியாமல்
துருப்பிடித்து கிடக்கிறது,

நாங்கள் விளையாடிய
சிறு பாலைவனம் மைதானம்
அமைதியாக மயானம் காக்கிறது *

நாங்கள் நிழல் தங்கிய மரங்கள்
யாருக்காகவோ இன்னும் தன்
நிழல்களை பாதுகாத்து வைத்திருக்கிறது,

நாங்கள் படித்து சென்ற
பள்ளி அறையும்
நான்கு சுவற்றில்
எங்கள் நினைவுகளை பகிர்ந்துகொள்கிறது,

எங்களுக்கு பாடம் நடத்தப்பட்ட
எழுத்து மர பலகையும்
இன்று தூசி படிந்துபடியே தனிமையில் பாடம் நடத்துகிறது,

நாங்கள் அமர்ந்திருந்த
கடைசி மேசை பலகையும் எங்கள்
நினைவுகளை சுமந்தபடியே மக்கிப்போய்விட்டது,

எங்களை விட்டு சென்ற
கடந்த காலம் மீண்டும்
எங்களை மீட்டுக்கொள்ளுமா,

கடிகாரம் முள்ளை சுற்றிப்பார்த்து தெரிந்தே ஏமாற்றம் அடைகிறோம்,

எங்களை கடந்து சென்ற
காலங்களும் சிறிது முன்னோக்கி நகர்ந்து எங்கள் கண்களில் கண்ணீர்
வடித்து செல்கிறது,
-praveen-

காதல் காட்சி

காதல் காட்சி *

நான் அவள் மண வேலியில்
அடைப்பட்டு
இன்றைய நாளிலும் அவளுக்கே கைதியானென் *

மறைந்திருக்கும் அவள் மூச்சுக்குழல் காற்றையும் சுவாசிக்க தொடங்கினேன்,

என் மூச்சு காற்று முதல் அவளை சுவாசிக்க  , தொடங்கினேன்,

௭ன் ஆசை குவளையில் அவள் நினைவுகளை நிரப்பி கொண்டேன்,

என் முக்கியத்துவம் அவளாய் மாறியது.
இன்று என் முகவரிகளோ அவளானது,

அவள் கண் விழி காடுகளில் வழி தெரியா காதல் மேய்ப்பானனேன் ,

காதல் அத்தாட்சியில் நானும் சிக்கிக்கொண்டேன்

தினமும் கனவுகளுக்குள் அவளை தேடினேன்,
என் கனவுலகில்,்
இன்றும் ஒரு நாள் என்னை ஆட்சி செய்து இவளே இளவரசியானாள்,்
 

காதல் கவிதை

உன் ஈர நீல கூந்தலில் சிக்கிய  ரோஜாவிற்க்கு ஒரு நாள்  சிறைச்சாலை ,
உன்அழகில் சொக்கியே
ரோஜாவிற்க்கு மறுநாள் வாடி உதிரும் மரண தண்டனை ,
ஆக்கம் -இதயம் பிரவீன்

காதல் கவிதை

என்னோடு தொன்றும் ஒவ்வொரு வருடங்கள் உன்னோடு கரையும் ஒவ்வொரு நிமிடங்கள் ,

உன்னோடு வாழும் ஒவ்வொரு நிமிடங்கள் நான் கரைகிறேன் ஒவ்வொரு நொடியிலும்,
ஆக்கம்-பிரவீன்

Wednesday, 23 January 2013

போர்களம்*

போர்களம்"

கணவன் வாள் வீச
போருக்கு புரப்படும்
முன்னே இவளிடம் மணப்போராட்டம்
தொடங்கப்பட்டது'"

அவன் ஆங்கே காற்றில்
வாள்வீசி எதிரியை வீழ்த்தினான் "

இவள் மணப்போரில்
ஒவ்வொரு நொடியும்
வீழ்த்தப்பட்டாள்"

அவன் போர்களத்தில்
மீண்டுவிட்டான் தன்
வீட்டை நோக்கி வெற்றியோடு பயணித்தான்"

இன்றும் ஒருநாள் இவளிடம்
வெள்ளாடை பறிக்கப்பட்டது"

அவன் வருகையை எதிர்பார்த்த
கண்களுக்கு கண்ணீர்
மட்டுமே சாட்சியானது"

ஒவ்வொரு நாளும்
இவளுக்கு சிலுவையானது"

இப்போரில் இவன் ஆயிரம்
பேரை கொன்றுகுவித்கான்"
இப்போரில் இவள் ஆயிரம்
முறைக்கொள்ளப்பட்டாள்"
ஆக்கம்-பிரவீன் —

காதல் சிறை

இரவு முழுவதும்
உன் இமை கதவை முடியபடியே என்னை சிறைபிடித்தாய் "

என் தூக்கம் இழந்து
உன் தூக்கத்தை
ரசித்து உன்னிடம் கைதியானேன்"
ஆக்கம்-பிரவீன்

Tuesday, 22 January 2013

காதல் கவிதை

உன்னிடம்
கடக்கும்
ஒவ்வொரு நொடிகள்ப்போதும்
நான் வாழ்ந்துக்கொள்ள"

உன்னை கடக்கும் ஒவ்வொரு நொடிகள் போதும் உன்னிடம் வாழ்ந்துகொள்ள"
ஆக்கம்-பிரவீன்்

கவிதை

உன் விழி பட்டே நான் உடைகிறேன்
உன்னிடம் என்னை இனைத்துவிடு"
ஆக்கம்-பிரவீன்-*ீ

சிறகு உடைந்த பறவை

சிறகு உடைந்த பறவை"
----------------------------------
முறிந்துப்போன சிறகுகள் என்னிடம் இன்று முதல் அறிமுகமானது"

என் இறகுகள் காற்றில் மிதந்தபடியே உதிர்ந்க்கொள்கிறது"

முறித்துப்போன சிறகுகளும் மறித்துப்போன  நரம்புகளும் என்னிடம்
சிலுவையானது"

என்னுடன் கடக்கும் ஒவ்வொரு நாட்களும் எனக்கு சிறையானது "

நான் மரணத்தின்  கூண்டில் அடைக்கப்ட்டிருக்கிறேன்
என் முறிந்துப்போன சிறகுகளே முதல் துழை சாவியானது"

காற்றை கிளித்து செல்வதற்க்கு  இன்னும் கொஞ்சம் முறிந்த சிறகுகள் மிச்சமிருக்கிறது"

என் சிறு இதய கூட்டின் கடைசி  துடிப்புகளை
என்னுடன் சேர்ந்து நேரங்களும் எண்ணிக்கொண்டிருக்கிறது"

மரத்தின் உச்சியிலிருந்து விழுந்தபடியே மீண்டும் மீண்டும் பறக்க முயற்ச்சிக்கிறேன்"

முயற்ச்சியை  கடைசி காற்றாக  சுவாசித்துக்கொள்கிறேன்"

இறுதியில் விடும் மூச்சி காற்றும் முயற்ச்சி
காற்றாய் இருக்கட்டும்"

ஆக்கம்-பிரவீன்

இங்கு இப்படிதான் விடியல்

இங்கு இப்படித்தான் விடியல்""

சீறைடந்த உடைந்த நிலங்கள் கொண்டிருக்கிறது தண்ணீரும் நுழையாத நிலங்கள் இங்கே"

கொதி மணலாய் இங்கே புதைந்திருக்கிறது "
ஈர காற்று இங்கே பருவம் மாரி வீசிகிறது""

அடர்ந்த புல்வெளியும் இங்கே கருகி முளைத்துக் கிடக்கிறது"

சூரியனின்  அனல் இங்கே நிறம்பி வலிகிறது ஆறுகளும் குளங்களும் தன் உருவம் இழந்து தன் தடங்களை விட்டுவைத்து மறைந்துவிட்டது "

மிருகங்கள் எழும்புகூடுகள் இங்கே மண்ணில் புதைந்தபடியே  வீசப்பட்டிருக்கிறது"

குளிர்ந்த மழை மேகங்களும் தன்னிடம் வந்தடைந்தும் சூரியனின் சாட்சியாக
மறுக்கிறது"

மனிதர்களின் கால்தடம் பதிந்த இடங்கள் அண்டுகள் மறைந்தும் கலையாத  படிந்துக்கிடக்கிறது "

இங்கே மனிகதர்கள் இனி வசிப்பதில்லை "

மரங்களின்  மரணம் இங்கே முதல் அத்தாட்சியானது"

இங்கே இப்படிதான் விடியலாயிற்று நாளை இப்படிதான் விடியும் "

ஆக்கம்+பிரவீன்

Monday, 21 January 2013

காதல் வலி

என் இதய வலியால்
சிந்தும் துளிகல்
ஒவ்வொன்றிலும்
கடலும் சிறு துளி "
ஆக்கம்-பிரவீன்

மரணம் அடையும் மரம் ஒன்று

மரணம் அடையும் மரம் ஒன்று"

ஈர மழையில் என்னை இருகிக்கொள்ளும் முன்னே"
காற்று அடித்து  நகர்கிறது கரு மேகங்கள் "

ஒரு துளி நீர் இரங்கி மண்ணில் விழ
என் நிழலும் கொதிமணலாய் மாரியது"

கரு மேகம் உடைந்து விலகிவிட   வெயிலின் முகம் பட்டே  என் இழைகள் சில கலை இழந்து உதிர்கிறது"

உடைந்த இழைகள் காற்றில் மிதந்தபடியே மண்ணில் விழுந்து உருண்டு உடைகிறது"

என்னிடம் மிஞ்சிருக்கும் எழும்புகளும் மக்கியபடியே
நொருங்கயது "

கண்ணீர் வடிக்க மேகங்களும்
தயாராகயில்லை"

என் வேர் நிரம்புகள் ஒவ்வொன்றாய் நீர் இழந்து விறைத்துப்போனது "

என்  வாசம் தொலைத்து நாட்கள் கடந்தேன்

இன்னும் கொஞ்சம் உயிர் மிச்சமிருக்க புயல் அடித்தால் சாய்ந்து மடிவேன்""
ஆக்கம்-பிரவீன்

Sunday, 20 January 2013

நினைவுகள்

அவள் பொய்யானாலும் அவள் நினைவுகள் உன்மையானவை "*

Saturday, 19 January 2013

என்னவள் கூந்தல்

என்னவளின் கூந்தல்"

நீண்ட கரு மேகமாய் அவள் கூந்தல் "

வீசும் காற்றும் கலைத்து விலையாடி செல்கிறதுஅவள் கூந்தலிடம்"

அவள் ஈர கூந்தலில் பட்டே வெள்ளாவி மறைந்துப்போகிறது"

ஒரு நாள் மறித்துப்போகும் மலரும் அவள் கூந்தலின் இடையே ஒலிந்து சவமாகிறது"

இயற்க்கையின் மணம் சிறைபிடித்து என்னை வசியம் செய்து ஆட்சி செய்கிறாள்"

கலைந்த ஒவியமாய் அவள் கூந்தலை கொண்டு நடமாடும் ஒவியமாய் அவளே""*

ஆக்கம்-பிரவீன்

நினைவுகள்

காதல் கடலில் என் இதய கரையை அவள் நினைவு அலைகளால் அரித்து செல்கிறாள்""**

நினைவுகள்


அவள் விழி திரை கலங்கியபடியே என்னை வரைந்திவிடுகிறது"

நினைவுகள் அட்சாணி அவளை அரியாமலே
என்னை எழுதிவிடுகிறது"

பழைய நினைவோடு  அவள் என்னை
புதிப்பித்துக்கொள்கிறாள்"

நான் அவள் கண்களோடு அழிய மறுத்தே அவளை அழிக்கத்தொடங்கினேன்"

அவள் இதய அறையில் என்னை பூட்டி காலத்தின் கட்டாயத்தில் சாவி அவள் நினைவிடமே  தொலைத்துவிட்டேன் "

அவ்வப்போது அவள் விழி திரை நினைவுகள் என்னை அழைத்து வருகிறது"**
ஆக்கம்-பிரவீன்

Friday, 18 January 2013

நைஸ் லவ் கவிதை

நம் காதல் பிறப்பதற்க்கு ஒரு நிமிடம் போதும்"*

நம் காதல் வாழ்வதற்க்கு இனி வரும் ஜென்மமும் போதாதடி"*

நாங்கள் நேசிக்க மறந்த இடங்கள் கூட எங்களை நேசிக்க மறந்ததில்லை "*

பிரிவு ஓன்றை நாங்கள் அறிந்ததில்லை "

பிரிவு ஒன்றைதான் நாங்கள் பிரிந்திருக்குறோம்"

ஆக்கம்-பிரவீன்

அவள் பிரிவு

பெண்ணே நீ விடைகொடுத்துச்
செல்லவதற்க்கு
முன்பு ..

ஓரு விடை
கொடுத்துச்செல் "*

உன் இதயத்தில்
எனக்கு இடம் இல்லை
என்பது சொல்வதைவிட

உனக்கு
இதயமே இல்லை
என்றுச்சொல்லிவிடு"*
ஆக்கம்*பிரவீன்
@[246968522100258:0]

Thursday, 17 January 2013

கவிதை

உன் விழியை இமை சிமிட்டி தீட்டிஎன்னை க்கொல்லாதே ""
-பிரவீன் -

Wednesday, 16 January 2013

காதல் தாக்குதல்

காதல் தாக்குதல்
----------------------------------
அவலொருத்திய  கண்டுவிட்டேன் "

என் நெஞ்சில நுளைச்சுவிட்டேன்

பூ ஒன்னு வச்சிருந்தாள் என்னை தாவனிப்போட்டு
இழத்துப்புட்டாள் "

உன்னை பின் தொடர்ந்து போகையில உன் நிழலையும் மிஞ்சிவிட்டேன்"

உன் கால் கொலுசு ஓசையில என் தேசமெல்லாம் மயங்குதடி"

உன் கள்ள சிரிப்பில் என்னை களவாடி போனவளே "

உன் ஓரக்கண் பார்வையாளே என்னை உயிரோடு புதச்சவளே "

உன் அலங்கார நடையில
என்னை திண்டாட வச்சவளே  "

உன் மௌனத்தாலே  அணு  அணுவாய் கொண்னவளே"

உன்னைக்  கடந்துபோகையில
மறுபிறவி எடுக்கிறேனே"
ஆக்கம்-பிரவீன்

Tuesday, 15 January 2013

ரோஜா

ஒவ்வொரு முறையும் ரோஜா என்று நினைத்து உன் இதழில் தேன் எடுத்து செல்கிறது அனைத்து வண்ணத்து பூச்சிகளும்,*
ஆக்கம் -பிரவீன் •

ரோஜா

உன் கூந்தலில் இருப்பதினால் என்னவோ ரோஜாவும் மனம் வீசுகிறது:•

Monday, 14 January 2013

இதயம்

ஒர் இதயத்தில் இரு உயிர்களுக்கும் சேர்ந்து துடிப்பதே காதல்"*
ஆக்கம்-பிரவீன்"்

Sunday, 13 January 2013

காதல்

ஒவ்வொரு பனி துளியிலும் என்னவள் முகங்கள்அவள் அழகில் கறைந்துப்போகிறது
பனியும் நானும்"!
ஆக்கம்-பிரவீன்

என் தாயின் அழுகையின் குரல்-*

என் தாயின் அழுகையின் குரல்......
........................
எழுத படிக்க
தெரியாதவளே"*

அவள் கருவறையில்
வெளிச்சமில்லை
எங்கள் வாழ்விலும்
வெளிச்சமில்லை ...!

அவளுக்கு துன்பங்கள்
கொடுத்து பிறந்தவனோ ..!
நான் காய்ந்த பூமியில்
விதைந்தவனோ...!

அவள்
புன்னைகயை துளைத்தவளோ...!

நான்
புன்னைகையை கண்டதில்லை ...

என்னை விதைத்தவனையும்
நான் கண்டதில்லை .."

என் தாயின் பசியிற்க்கு
பஞ்சமில்லை..."

உன் பசியோடு என்
பசியை தீர்த்தவளே ..!

உன் அன்பிற்க்கு
பஞ்சமில்லை ."*

நான்
பள்ளிக்கு செல்லும்
வயதில் பனியிற்க்கு
செல்கிறேனே"*

உடுத்த
உடையின்றி
அழைகிறோமே்"*

என் தாயின்
புடவையில்
ஒட்டைக்கு
குறைவு இல்லை.."*

எங்கள்
ஏக்கங்களுக்கு
அளவு இல்லை."*

நான் மழையில்
நனையாமல்
இருக்க "*

உன் ஒட்டை
புடைவையை
கொடையாய்
விரித்தவளே .."*

நீ மழையில்
நனைகையில்
என்மணம்
துடிக்கிறதே..!

குருவிக்கும்
கூடு உண்டு
எங்களுக்கு
வீடு உண்டா ..*

அம்மா எனக்கு
இன்றுகை நிறம்ப
பணம் உண்டு"*

அன்று உடுக்க
உடையுண்டா ..!

இன்று உடுக்க
உடையுண்டு அன்று நமக்கு உணவுண்டா....!

என் தாயின்
அழுகையின் குரல்
இன்றும் என் காதில்
ஒளிக்கிறது..."

இன்று எனக்கு
ஆயிரம் உறவுண்டு
அம்மா
என்று அழைத்திட
நீ உண்டா ...!

என் தாயின்
அழுகையின் குரல்
என் காதில் ஓளிக்கட்டும் ."*

என் கண்ணில் பூக்கும்
பூ அவளுக்கென்று பூக்கட்டும்."*

என் தாயின் அழுகையின்
குரல் ..."
ஆக்கம்-பிரவீன்-- }

ஒரு குழந்தையின் அழுகை குரல்

ஒரு குழந்தையின்
அழுகையின் குரல் பக்கம்1

அம்மா நீ என்னை வைத்தில  சுமக்கும்போது என்னலாம் நினைச்சிசுருப்ப
சீமையில் பிறக்காத
சிங்க குட்டி பிறப்பானோ"*

தங்கத்தில் செஞ்ச பெண் குழந்தை  பிறப்பாளோ...**

உன் வயசுக்கும் என் வயசுக்கும் பத்து வருடம் கூட தான்டலயே.**

பால் வாங்க பணம் இல்ல உன் நெஞ்சிலயும் கூட ஒரு துளி பால் இல்ல.**

பிஞ்சு வயதில் பிச்ச எடுக்க என்னை மடி சாச்சிய காட்டிரியே**..

பசி வயிறு என்ன கிள்ள என் அழுகையிலும்
உனக்கு சொல்ல**..

சுட்டேரிக்கும் சூரியனும் என் உயிர பாதி எடுக்க மீதி உயிரையும் பசி எடுக்க..*

என் அழுகையும்
உன் பிஞ்சி வயதுக்கும் தெரியலயே..**

பட்ட மரத்தில் பூத்திருந்தா என் அழுகையும் புரிஞ்சிருக்கும்**..­.

இப்ப துலுத்த மரத்தில் பூத்துவிட்டேன் என் பசியும் புரிஞ்சிடுமா...**

கருவறையில் சொல்லிருந்தா கருவறையில் கலைந்திருப்பேன் "

நான் போய் சேரபோறேன் சேந்த பிறகு அழுதிடேன் அம்மா..**

அடுத்த ஜென்மம் ஒன்று இருந்த பட்ட மரத்தில் பூத்திடுவேன் இல்ல என் வைத்தில் உன்னை சுமந்திடுவன் ...**

நான் செத்த பிறகு ஊத்தும் பால கொஞ்ம் முந்திய ஊத்திருந்தா ...**

கூட கொஞ்சம் வாழ்ந்திருப்பேன்..**

சின்ன வயதில் பழுத்த உன்ன பிஞ்சி வயதில்
பிரிய போறன்..**

உன்ன தனியா விட்டுபோக எனக்கு கொஞ்சம்
கூட மனசு இல்ல ...**

செத்தாலும் உன் கூட தாயா நான் துணை
இருப்பேன்..**

பாலு குடிக்கும் வயதில் பால் குடிச்சி போறேன் தாயே...**
ஆக்கம்-பிரவீன்

Saturday, 12 January 2013

நினைவுலகம்

உன் நினைவுலகில் நான் வாழ்கிறேன் என் நினைவுலகில் நீ ஆள்கிறாய்"
நினைவுலகில் காலங்கள் பின்நோக்கி செல்கிறது உந்தன் உருவம் என் முன்னோக்கி மறைகிறது "
by praveen

காதல் கவிதை

எந்த மொழியில் துவங்கினாலும்
முதலில் அவள் பெயரை எழுதச்
சொல்கிறது எந்தன் விரல்கள் "
எந்த மொழியில்
எழுதி முடித்தாலும் அவள் பெயரில்
முடிக்கிறேன்"
தொடக்கமும் அவளே முடிவும்
அவளே""
ஆக்கம்-பிரவீன

Friday, 11 January 2013

இனித்த நினைவு கவிதை

காலமெல்லாம் காத்திருக்க இந்த காலங்கள் போதாதடி "
உன் நினைவில் நான் வாழ்ந்திருக்க இந்த நொடிகல் போதுமடி"
ஆக்கம்-பிரவீன்

காதல் கவிதை

உன்  மடியில் தினம் தினம் இறப்பு என்றால்'"
ஆயிரம் முறை பிறப்பெடுப்பேன்'"
ஆக்கம்-பிரவீன்

love romance

ஒரு வரி கவிதை உன் பெயர், ,
இரு வரி கவிதை உன் கண்கள்""
வரியே இல்லாத கவிதை உன் மௌனம் ""
வரிகளை இழந்த
கவிதை நீ""
இவையெல்லாம் ரசித்த கவிஞன் நான்"
ஆக்கம்-பிரவீன்

காதல் தேசம்

எந்த தேசம் சென்றாலும் உன் நினைவு கூடவே வருகிறது"!
உந்தன் தேசம் சேரச் சொல்கிறது"
கானும் இடம் உன் முகம் கானாத முகம் உன்னிடம்"
ஆக்கம்-பிரவீன்

Thursday, 10 January 2013

காதல் மழை

நான் பொழிந்த காதல் மழையில் ஒரு பனி துளி நீ"
நீ கரைந்து என்னுள் கலந்துவிடு "
ஆக்கம்-பிரவின்

என் காதல் கவிதை

உன் விழியில் ஒளிய இடம்  கொடுத்தே என்ணை கரையவிடுகிறாய்"

உன் இதயத்தில் ஒளிய இடம் கொடுக்க ஏன்
மறுக்கிறாய் "

தேசம் எல்லாம் தேடியும் கிடைக்காத வலி நீ என்னை சேர மறுப்பதால் கிடைக்கிறதே ஏன் "

பெண்ணே உன்னை நினைப்பதே சுகமாய் நினைக்கிறேன் ''்

உன்னை மட்டும் நினைப்பதால்
சுகமாய் இறக்கிறேன்"

உன் மடியில் இனி வாழ ஆசையில்லை உன் மடியில் சாக ஆசை"

என்னை காதலிக்காமல் இருக்கிறாய் என்னை காதலிக்காமல் இறக்கிறேன்"

ஒவ்வொரு நொடியும் மரணம் என்னை நெருங்கட்டும்"

அந்த ஒவ்வொரு நொடியிலும் என் மணம் உன்னை நினைக்கட்டும்
ஆக்கம்-பிரவீன்