நட்பு கடலில்
உன் அன்பு கறையை அடைய"
காலத்தின் படகில் உன்
நினைவு துடுப்புகளால்
நான் பயணம் செய்கிறேன் ""
முடிவில்லா உன் அன்பு
கறை அடைய""
ஆக்கம்-பிரவீன்
Monday, 31 December 2012
நட்பு
வருமை
ஏலைகள் உணவுக்கு பஞ்சம்
அவர்கள் பசிக்கு பஞ்சமில்லை .""
அவர்கள் செழிப்புக்கு பஞ்சம்
அவர்கள் வறுமைக்கு பஞ்சமில்லை ""
அவர்கள் புன்னைகைக்கு
பஞ்சம் அவர்கள்
கண்ணீர்க்கு பஞ்சமில்லை ''"
பஞ்சங்களை கொடுத்து கொடுத்து பஞ்சத்துக்கே
பஞ்சமாம் .""
இரவின் விடியலில்க் காலை ""
ஏலைக்கு விடிவுண்டு நாளை
வருமை
பிஞ்சி வயதில் உழைத்திட
வறுமைகள் எதுக்கு..
பறக்க முடியாமல் படைத்திட
இறக்கைகள் எதுக்கு..
ஒரு துளி தண்ணீர்க்கு தவிதிட
தாகங்கல் எதுக்கு ..
கண்ணீர் பூக்கள் பூத்திட
புன்னகை எதுக்கு ..
ஒரு வேலை உணவுக்கு அழுதிட
பசி எதுக்கு.
வறட்ச்சியை மட்டும் காண்கிர
கண்கள் எதுக்கு ..
மழைகள் இருந்தும் காய்ந்திட
மழைகள் எதுக்கு..
விடியல்கள் இருந்தும் விடியாத
வாழ்கையில் விடியல்கள் எதுக்கு..
இவைகள் அனைத்தும் பொறுமையாய்
காண்கிற
இறைவன் எதுக்கு...
ஆக்கம்-பிரவீன்
நீ பிரிந்த வாழ்கை
நீயின்றி உலகம் ....
மழைகள்
பொழியா
நிலங்கள் கூட நனைவதில்லை""
நீ தந்து சென்ற கண்ணீர்
மழையில் நான் மட்டும் நனைகிறேன்"""்
நிலைத்திருக்காத
வாணவில்
வண்ணங்கள் தீட்டி செல்கிறேன்""
தேன் இல்லாத
பூக்கள்மிது வண்ணமில்லாத
வண்ணத்து பூச்சி ...
அசையா மரங்கள் அசிந்துருக்கும்
என் நினைவுகள்
இனியா கனிகல்
இனித்திருக்கும் நினைவுகள்""
சிறிய சாலைகள்
கடக்க முடியா தூரம்
நான் மட்டு கடந்தும் என்
நிழல்கல் மட்டும் நிர்கிறதே...
உதிக்கும் சூரியன்
உதிக்காத வேளிச்சம் ..
கறை இல்லாத
கடல் அமைதி இல்லாத மணம்.
நிலவு இல்லாத
இரவுகள்
நீ இல்லாத கனவுகள் ..
உயிர் இல்லாத உடல்
துடிக்க மருக்கும் இதயம் துடித்து இறக்கும் நான்""
ஆக்கம்-பிரவின்
காதல்
கிளிகளைப்போல் பறந்திருந்தேன்
காதல் கூன்டில் அடைத்துவிட்டாய்.""
விடை கொடுத்துருந்தால்
பறந்திருப்பேன்.""
உன் இதயத்தில்
என்னை விதைத்துவிட்டாய்
இன்று மரமாய் வழர்ந்திருக்க.
உன் நினைவுகள் என் பழமாய்
பழக்குறதே""
என்னை வெட்டி எறிந்துருந்தால்
சாய்ந்துருப்பேன் .""
என் இதயத்தில்
உன்னை ஒவியமாய்
வரைந்துருப்பேன்
கண்கள் இரண்டும் பரித்துவிட்டாய்
உன் நினைவுகளை சிலுவயாய்
சுமக்கிறேன் உன் காதலை சுமந்த
குற்றத்திர்க்கு ..
ஆக்கம்-பிரவீன்
கனவு
என் தாயின் கறுவறையில்
நான் கண்ட கனவு
என் நினைவுகள்
பதியப்படாதவை ..
நான் கண்ட கனவு எல்லாம்
சித்தரிக்க பட்டவையோ..
கனவு பயணத்தில்அழைத்து
செல்வது யாரோ.
கனவுகளை கலைத்து செல்வது யாரோ...
கனவுகள் பிறப்பிடம் இருல்
சூழ்ந்த உலகமோ..
கனவு உலகத்தில் நம் நினைவுகள்
மட்டும் சுற்றுகிறதே..
நம் உணர்வுகள் பயணிக்காதோ ...
நாம் கண்ட கனவுகள்
கணக்கிடமுடியாதவை.
அதில் நம் நினைவில்
பதிந்தவை எண் ஜந்தக்கூட
தான்டாதவை....
ஆக்கம்-பிரவீன்
காதல்
அசையா அதிசையங்கள்
ஏழு என்று கணக்கிட்டவர்கள்..!
அசையும் அதிசையம்
உன்னை கணக்கிட
மறந்துவிட்டார்களோ."
ஆக்கம்-பிரவீன்
காதல்
முதல் காதல்..
என் புன்னைகைக்கு அளவில்லை
உன் நினைவு பசியால்
இருக்கிறேன்..""
தொடும் தூரம் வானம்
ரக்கைகயின்றி பறக்கிறேன்....
நீ விட்டு செல்லும் அனைத்தும் ்
என்னை விட்டு செல்ல
நினைப்தில்லை ...
கண் எதிரே இருந்தும் எப்போதும்
உன்னை என் விழிகள் தேடும் அழைகிறதே""
பறக்கும் குறிவிகல் சத்தம்
அனைத்தும் உன்் பெயராய் என்
காதில் ஒளிக்கும்....
என் வீட்டு அறையில் உனக்காய்
சேர்ந்த காகித குப்பைகள் ....
எப்போதும் ஓய்வு இல்லாத என்
வீட்டு முக கண்ணாடிகள் .
உனக்கென்று எப்போதும்
பூக்களை சுமக்கும் என்
விரல்கள் ...
அனைத்து பெண்களிடம் உன் முக
பொய்யான சாயல்கல்..
கலைந்துப் போகும் கனவுகள்
எப்போதும் கலையாத உன்
நினைவு கள்.....
முதல்காதல் அனைவரின்
வாழ்கையில் இன்ப சாரல்கள..
ஆக்கம்-பிரவீன்
அம்மா
என் அன்னையின் மார்பில் நான்
சாய்ந்து உறங்கும்பொது அவள்
இதய துடிப்பும் என் காதில்
உச்சரிக்கிறது மகனே எழுந்துவிடாதே என்று'"""
ஆக்கம்-பிரவீன்
காதல் கவிதை
என் இதய அறைக்கு
அவள் விழிகள்
ஒளியாயிற்று ...
என் கனவு அறைக்கு
அவள் நினைவுகள்
ஒளியாயிற்று..
என் வாழ்வில் மட்டும்
ஏனெடி ஒலி கொடுக்க
மறுக்கிறாய் .""
ஆக்கம்-பிரவீன்
தாயின்-குரல்
எழுத படிக்க
தெரியாதவள் ....
அவள் கருவறையில்
வெளிச்சமில்லை
அவள் வாழ்விலும்
வெளிச்சமில்லை ...!
அவளுக்கு துன்பங்கள்
கொடுத்து பிறந்தவனோ ..!
நான் காய்ந்த பூமியில்
விதைந்தவனோ...!
்
அவள்
புன்னைகயை தொலைத்தவளோ..
அவள்
புன்னைகையை கண்டதில்லை ...
என்னை விதைத்தவனையும்
நான் கண்டதில்லை .."
என் தாயின் பசிக்கு
பஞ்சமில்லை..."
உன் பசியோடு என்
பசியை தீர்த்தவளே ..!
உன் அன்பிர்க்கு
பஞ்சமில்லை ...
நான் பள்ளியிர்க்கு
சென்றதில்லை
உடுத்த
உடையின்றி அழைகிறேன்.....
்
என்
தாயின் புடவையில்
ஒட்டைக்கு குறைவு இல்லை.."
எங்கள்
ஏக்கங்களுக்கு
அளவு இல்லை...."
்
நான் மழையில் நனையாமல்
இருக்க உன் புடைவையை குடையாய் விரித்தவளே ....!
நீ மழையில் நனைகையில் என்
மணம் துடிக்கிறதே..!
குருவிக்கும் கூடு உண்டு
எங்களுக்கு வீடு உண்டா ...
அம்மா எனக்கு
இன்று பணம்
உண்டு அன்று உடுப்பதர்க்கு
உடையுண்டா ..!
இன்று உடுப்பதர்க்கு
உடையுண்டு அன்று நமக்கு உணவுண்டா....!
என் தாயின்
அழுகையின் குரல்
இன்றும் என் காதில்
ஒளிக்கிறது..."
இன்று ஆயிரம்
உறவுண்டு அம்மா
என்று அழைத்திட
நீ உண்டா ...!
என் தாயின் அழுகையின் குரல் என் காதில் ஓளிக்கட்டும் ..
என் கண்ணீரில் பூக்கும்
பூ அவளுக்கென்று பூக்கட்டும்...
...ஒரு தாயின் அழுகையின்
குரல் ...
ஆக்கம்-பிரவீன்
காதல் தோல்வி
காதலியைத் தொலைத்த காதலன்
வாழ்கை....
உன் விழியில்
நான் வாழ்ந்த
காலங்கள் உன்னிடம் தொலைத்த
நேரங்கள் ...
நீ விட்டு சென்ற உலகத்தை நான்
மட்டும் கடக்கிறேன் ...
தொலைந்துப்போன
வானம் நீயின்றி
பிரியும் நிமிடங்கள் ..
உனக்காய் திறந்த இதயம்
இன்று நீயின்றி மூட
மறுகிறதே....!
உனக்காய் காத்திருக்கும்
கதவுகளை உன் நினைவுகள்
தட்டி செல்கிறதே ....!
உனக்காய் எழுதிய பேனாவும்
இன்று நீயின்று எழுதிட
மறுக்கிறதே..!
உனக்காய் எழுதிய
கவிதை எல்லாம்
இன்று நீயின்றி படித்திட
மறுக்கிறதே ..!
உன்னுடன் கடந்த
இடங்கள் எல்லாம்
இன்று நீயின்றி அமைதி காக்கிறதே....!
நீயின்றி கடக்கும் இரவுகள் கூட
இன்று வேகமாய்
விடிந்து செல்கிறதே...!
நீயின்றி நகரும்
பருவங்கள் அனைத்தும்
இன்று நிலைமாரி கிடக்கிறதே ...!.
சுட்டெரிக்கும் சூரியன்
கூட இன்று என்னுடன்
சேர்ந்து குளிர்கிறதே ..!
என்னுடன் தோன்றும் நிலவு கூட வெளிச்சம்
தர மறுக்கிறதே ..!
நீயின்றி தோன்றும் கனவுகள்
எல்லாம்
இன்று நரகமாய்
தோன்றி செல்கிறதே ..!
உன்னை நினைவாள் துடிக்கும்
இதயம்
கூட எனக்கேன்று
நிர்க மறுக்கிறதே ...!
உன் உலகில் நான்
எங்கே தொலைந்தேனோ ...!
கடைசியாக பார்க்கிறேன் என்
முகத்தை பாலடைந்த ஓவியமாய்
தாடி முளைத்து கிடக்குதே.
நீயின்றி வாழும் உயிர்க்குட என்னை
கண்டு வெறுக்குதே ...!
என் காலங்கள் முடியும் நேரங்கல்
வந்தும்
என்னை அழைத்து
செல்ல மறுக்கிறதே .....!
முடிவு ஒன்று வறுவதர்க்கு என்
உள்ளங்கல் ஏங்கி
ஏனோ துடிக்கிறதே ...!
்
என் உயிர் பரித்திட
எவன் வருவான்
உன் நினைவாய்
சேர்ந்து செல்வேனடி ""
மறு ஜென்மம்
ஒன்று பிறக்கவேண்டாம்
மறுபடியும்
உன்னை இழக்கவேண்டாம் ..
முடியும் நேரத்தில் முடிக்கிறேன்....ஆக்கம்""பிரவீன்
வருமை
புத்தகம் சுமக்க வேண்டிவயதில்
சுமைகள் எதுக்கு.
பேனா பிடிக்கும்
விரல்கலுக்கு கொடாளி எதுக்கு ..
புன்னகை மலர வேண்டிய
முகத்திர்க்கு கண்ணீர் எதுக்கு ..
துள்ளி குதிக்கும்
மனதிர்க்கு துன்பங்கள் எதுக்கு ..
எதிர்க்காலம்
பொக்கிசங்களை ஏங்க
வைத்து அழிக்கிறோம் .
ஆக்கம்-பிரவீன்
காதல் கவிதை
நீ யின்றி நான் இல்லை
நானின்றி நீயில்லை ..
நீ பூவாய் மலர்ந்திருக்க
நான் மணமாய் மணக்கிறேன்....
்
நீ நிலவாய் நிலைதிருக்க
நான் ஒளியாய் ஒலிந்திருக்கிறே
ன்......
்
நீ உயிராய் பிறந்திருக்க உன்
உயிராய் நான் உள்ளேன் ...
நீ நினைவாய் நிலைதிருக்க
உன் நினைவாய் நான்
இருக்கிறேன்...""
ஆக்கம்-பிரவீன்
கனவு விதைகள்
எங்கள் கனவுகள்
கடந்த காலத்தில்
விதைக்கப்பட்டன....!
்
முளைக்கபடாத நிலத்தில்
விதைத்திருந்தாலும்
எங்கள் முயற்ச்சியின்
மழையில்
நிறவேறுமே....!
எதிர்
காலத்திர்க்கு
சேர்த்தே கனவுகள்
புதைக்கிறோம் .."
எங்கள் கனவுகள்
மட்டும் வளர்கிறதே...!
முளை முளைத்து வருகையில்
புயல் வந்து அழிக்கிறதே...!
முறிந்தவை எல்லாம்
முளைப்பதர்க்குள்
அடுத்த புயல்
வந்திடுமோ......!
மரமாய்
வளர்ந்து நிர்க்கையிலே நிழல்கல்
தந்ததும் சாய்கிறேனே..!
நிழல்கள் தந்த மரங்கள்
ஒரு நாள் கனிகள்
தந்திட மறுத்திடுமோ...!
எங்கள் கனவிர்க்கு
பலன் கிடைத்தும்
சில காலங்கள் கடந்து
சென்றதே...!
வறட்ச்சியில் வளர்ந்த
மரம் கூட நிழல்கள்
தருவதர்க்கு மறுத்திடுமோ....!
எங்கள் கனவு ஒரு
நாள் நிரவேறஅது சுகம்
தருவதர்க்கு மறுப்பதுன்டோ...!
நம் முயற்ச்சி நிலைக்கும்வரை
கனவுகள்
கலைவதில்லை.!
்
முயற்ச்சிகள் கலையும்போது
கனவுகள்
நிலைப்பதில்லை...
ஆக்கம்-பிரவீன்
காதல் கவிதை
பெண்ணே
என் இதயத்தில்
காதல் விதையை விதைத்துவிட்டு ..""
அதை
அருவடை செய்து விடாதே.
அழிவது காதல்
மட்டும் அல்ல
நானும்ந்தான்..
ஆக்கம்-பிரவீன்
காதல்
உன்
அழகை கண்டு காற்று புள்ளாங்குழளில்
வர்ணிக்கிறது..
உன் அழகை கண்டு
மழை நீர் கடலிடம்
மொழி பெயர்க்கிறது ..
உன் அழகை கண்டு நிலவும்
வெக்கதில் அமைதி காக்கிறது...
இயற்கை அனைவரும்
உன்னை வர்ணித்துவிட்டதே..
உன் அழகை கண்டு
நானும் உன்னிடம்்
தொலைந்துப்போனதால்
என்னவளை எனக்கும்
செர்த்து வர்ணியுங்கள..
ஆக்கம்-பிரவீன்
காதல்
நம் நட்புடன் பயணித்த நாட்களுக்கு
நிமிடங்கள் சுமையல்ல..""
நம் நட்புடன் பயணித்த
காலங்களுக்கு நாட்கள்
சுமையல்ல ...
நமக்காய் புன்னகித்த
இதழ்கலுக்கு புன்னகை
சுமையல்ல ..
நமக்காய் கண்ணீர் வடித்த
கண்களுக்கு கண்ணீர் துளிகல்
சுமையல்ல..
நமக்காய் சுமக்கும்
இதயத்திர்க்கு நம் நினைவுகள்
சுமையல்ல..
நம் பிரியும் நேரம்
நம்மை கடக்க
போகிறது நன்பர்களே..."
நன்பர்களே நம் ஞாபங்கள்
கண்ணிரிலும் அழியாமல்
இருக்கட்டும்..
நன்பர்களே உன் கண்ணீரை
துடைக்கும்
கைகுட்டையாய் என் கரங்கள்
இருக்கட்டும் ..
்
நம் ஞாபகங்களை காலத்திலும்
அழியாத சின்னங்களாய்
கொண்டு செல்வோம்.."
நம் பிரிவு ஒன்றை சுமைகளாய்
கண்ணீரோடு அழைத்து செல்வோம்....
நன்பர்களே என் திருமணத்தில்
பெறும் மணமாய் என்னை வாழ்த்தி
செல்லுங்கள்""
என் கடைசி
இருதி ஊர்வளத்தில் கலந்துக்கொண்டு என்னை
சுமந்துசெல்லுங்கள்"""
ஆக்கம்-பிரவீன்
காதல்
என் விரல்களுக்குள் யுத்தம்
உன்னை முதலில் யார்
வர்ணித்து எழுதுவது என்று..."
என் பேனாக்களுக்குள் யுத்தம்
உன்னை வர்ணிக்கும்
விரல்களை யார்
முதலில் சென்றடைவது என்று ..."
உன்னை வர்ணிக்கும்
எழுத்துக்களுக்குள்
யுத்தம் உன் உதடுகளால் யார்
முதலில் வாசிக்க படவேண்டும்
என்று ..."
எனக்குள் யுத்தம்
நீ என்னை ஏற்றுக்கொள்வாயா
என்று".. —
காதல்
அவளை தேடி ஒரு பயணம்
............................................
நீண்ட தூரம் பாலைவனம்
வழிகள் எல்லாம் உன்முகம்
கானல் நீர் பிம்பம் ..""
பாலைவனத்தில்
காய்ந்த இலைகலாய்
உன் ஞாபங்களில் நான் காய்ந்து செல்கிறேன்""
தண்ணீர் வற்றிய பாலைவனத்தில்
உன் நினைவாய்
வற்றாத என் கண்ணீர் துளிகல்""
உன்னை தேடி
சென்ற பயணத்தில்
மிச்சமானது என் எதிர்பார்ப்பு
மிச்ச படித்து கொடுத்தவள் அவள்..
நீண்ட தூரம் சாலை பயணம்
உதிர்ந்து கிடக்கும் அவள்
விட்டு சென்ற காலடிகள்
மண் துகள்கள்..
்
உதிர மருக்கும் நீ விட்டு சென்ற
ஞாபங்கள் ....
இலைகள் எல்லாம் ஒன்றுகூடி உன் முகத்தை என் எதிரே
வரைந்து செல்கிறதே..""
உன்னை கானும் பொதேல்லாம் அந்த இடங்களில் நான்
இறந்துப்போகிறேன்..""
உன்னை கண்ட
நிமிடங்கள் எல்லாம்
எண்ணிக்கையில் அடங்காமல்
மறித்துப்பொகிறேன்""
பெண்ணே என் உயிரிலிருந்து
மிஞ்சியவள் நீ
உன்னிடமிருந்து மிஞ்சியது
உன் ஞாபங்கள் .
மிச்சாமான உன்
ஞாபங்களை வைத்து
மீதி நாட்களை கடந்துவடுவேன்
அவளை தேடி ஓரு பயணம்
செல்கிறேன்""
ஆக்கம்-பிரவீன்
காதல் கவிதை
உன்மீது காற்று மெதுவாய்
மோதிவிடும் போழுது என் இதயம்
வேகமாய் துடிக்கிறதே.."
உன் பாதம் பூக்களாள்
மிதிபடும்போழுது என் மனம்
ஏனோ வலிக்கிறதே.""
உன் மீது மழை துளிகல்
சிந்திவிடம்போழுது
என் கண்ணோ ஏனோ கலங்குகிறதே..""
இதுதான் காதலா
இதுவும் காதலா
பதில் தா காதலா
பதிலும் காதலா..
ஆக்கம்-பிரவீன்
குழந்தையின் குரல்-6
ஒரு குழந்தையின் அழுகையின்
குரல்-6
என் முத்தான சிரிப்பைக்கான
அம்மா உன் கையில
முத்து முத்தா காயமடி
என் மனசு நோகுமடி..""
பிள்ளையின் பசி தீர்க்க நாள் முலுக்க உழைச்சாயடி ..""
ஒரு துளி பாலுக்கு உன் ரத்தம்
சிந்தி கொடுத்தாயடி
என் பசி தீர்ந்தடி.""
என் உடம்பிர்க்கு புது துனி மாட்ட
பத்து வீட்டில் உழைச்சாயடி.""
என் ஆசை தீர்ந்ததடி
என்ன கான்வென்ட்டில்
சேப்பதர்க்கு நீ கால் நோக
திரிஞ்சாயடி..""
உன் மகனுக்கு புத்தகம் வாங்க உன் புன்னகைய இழந்தாயடி.""
என் மனசு வலிக்குதடி.
என் விரலுக்கு பேனா மாட்ட
உன் கையில கொடாளியடி
என் பேனாவிர்க்கும் கண்ணீரடி .."
என் படிப்பு முடிப்பதர்க்குல்
உன் வாழ்கை முடிந்ததடி
நான் பட்டம் வாங்கையில
நீ பாடையில போறியேடி..""
உன்னை மெத்தையில படுக்கவைக்க
நான் ஒரு கனா கண்டேன் ..""
உன்ன தங்க தட்டுல ஊட்டி விட
நான் ஒரு கனா கண்டேன்..
உனக்கு பட்டு சேலை மாட்டிவிட
நான் ஒரு கனா கண்டேன்..
உனக்கு தங்க சங்கிலி மாட்டிவிட
நான் ஒரு கனா கண்டேன்..
உன் கொண்ட நேரிய
மல்லிகை பூவாயந் நான்
ஒரு கனா கண்டேன்..""
உனக்கு சிங்கபூர் சுத்திக்காட்ட
நான் ஒரு கனா கண்டேன்...
நீ
என்னை விட்டு போகுவேனு ஓரு நாளும் காங்களயே .""
உன்னை சுடுக்காட்டில்
வழி அனுப்ப ஒரு நாளும்
காங்களயே..""
......முடிவு...
காதல்-1
காதல் நினைவுகள்-1
நான் உன்னை கான்பதர்க்கு உன்
வீட்டு சாலையின்
அருகே கடக்கையில்..""
என் கண்கள் என்னை அறியாமல் உன் வீட்டை சுற்றி வட்டமிட.""
அமைதி காற்றுபடுகையில்
மெல்லிசை பாடி அழைகிறது உன்
வீட்டு வரவேற்பு குயில்கள்..""
்
என் நடைகளுக்கு என்ன
வெக்கமோ மெதுவாய் என் கால்கள் தாலமிட ..""
என் கைகளுக்கு என்ன
வெக்கமோ அமைதியாய்
ஒளிந்துக்கொண்டது வாய் வைத்த
என் பாக்கேட்டில் .""
மாலை பொழுது என்
காதலை கடந்து செல்ல."
உன் வீட்டு வாசலில்
அமர்ந்துக்கொண்டே
உன் விழிகள் என்
முகத்தை பார்த்து கொண்டே
உன் விரல் கொலம்
என்ற பெயரில் சித்திரம்
வரைகையில் ...""
சில நீமிடங்கள் கடந்தாலும்பல
ஆண்டு களித்த மரதியோ
அந்த நிமிடங்கள் நான் மட்டும்
அழகானேன் ..
என் மனம் தொலைந்துபொனது உன்வீட்டு வாசலில் ..""
உன் வீட்டை கடக்கையில் நான்
மறு பிறவி எடுத்தேனோ...
....தொடரும்.....
காதல்-2
காதல் நினைவுகள்-2
என் பள்ளி வாசல் கதவு திறக்கும்
முன்ன அவள் வருகை எதிர்
பார்த்து நிர்க்கிறது காலம் கடந்த
காதல் புயல் .""
ஒரு நிமிடம் கடக்கும் முன் என்
இதயம் என்னமோ அவள்
பெயரை மௌனமாய் என்
மூளைக்கு உச்சரிக்கிறது..""
அவள் வருகையை கண்டதும் என்
கண்களுக்கு அவள்
புன்னகை விருந்து ..""
அவளுக்கு முன்பே வந்தும் என்
மனமோ அவளுக்கு பின்பே அழைத்து செல்கிறது..""
கலைந்து கடந்த
தலை முடியை அவளை கண்டதும்
என் கைகள் படிய தொடங்கியது ....
அவள் யாரை பார்த்தாலும் என்
மனம் தெரிந்தே ஏமாற்றம்
அடைகிறது என்னை பார்பதுப்போல்..""
என் கண்கள்
அவளுக்கேன்றே படைத்ததுப்போல்
அவளை மட்டும் காண்கிறது ..""
என் பள்ளி அறை கடைசி மரம்
மேசையில் அவள்
பெயரை எழுதி என் விரல்கள்
பழகுகின்றது ..
என் புத்தக அறையில் அவள்
விட்டு சென்ற குப்பைகள் எல்லாம்
சிறை பிடித்த காகித பொக்கிசம்..""
பள்ளி முடிவு மணி அவளை விட்டு பிறியும்
எதிற்பு மணிப்பொல்
எனக்கு தோன்றிகிறது...
மறுநாள் அடிக்கும் காலை மணி என் மனதில் வீசும் காதல் மணி""..
தொடரும்...
காதல் பக்கம்-3
காதல் நினைவுகள்-3
என் இதயத்தில்
அவளுகேன்றே வரையப்பட்ட முதல் காதல் கடிதம்..""
அவள் அருகே தயக்கத்துடன் நான்
நெருங்க நெருங்க . .""
அவள் சட்டென்று என்னிடம் (என்ன)
வென்று கேட்டதும்
எனக்கோ புரியாத மொழியாய்
தொன்றியது..""
என் கைகள் காதல் காச்சல்
தாக்கப்பட்டு பயம் கலந்த
நடுக்கம் .""
என் தொன்டையில் வார்தைகள்
தடுமாற்றம் ..""
எனக்கு முன்பே என்
காதலை அவளிடம் என்
வேர்வை துளிகள்
மொழி பெயர்த்தது ..""
கைகுட்டையில்
வார்தைகளை அடைத்துவிட்டேன்"...
காதல் கடிதம் குடுப்பதர்க்கு என்
கைகளுக்கு பலம் இல்லையோ.."
ஒரு வழியாக என் கடிதத்தின்
வழியாக என்
வார்தைகளை அவளிடம்
பரிமாரினேன் ...""
என் காதலை கடிதத்தின் வழியாக
அவள் இதயத்தில் அவள் உதடுகள்
எழுத தொடங்கியது .""
சரி என்று அவள் விழிகள் என்னிடம்
எழுதியதது ..""
அவள் வெக்கத்தில்
புன்னகை பூத்து குலுங்கியது "..
என் உடலில் காதல் மின்சாரம்
தாக்கியது ...
என்னை புதிதாய் எழுத
தொடங்கினேன்
அவள் இதய புத்தகத்தில்""்
தொடரும்...
காதல் பக்கம-பிரவீன்
காதல் பக்கம்-4்
்
மறுநாள் என் வாழ்வில் காதல்
விடியல்""
பள்ளி வகுப்பறை அடைய
நேரங்களை எண்ணிக்கொன்டே இருக்குறேன்'"
பழைய அறைகல் புதுப்பித்து
கிடந்தன
என் பார்வைக்கு மட்டும்
என் நன்பர்கள் முதல் பழக்கம் பொல் தொன்றியது"
அவள் வகுப்பறைக்குள்
கடந்து வந்தாள் அவள் வந்ததும் சக தோழிகளிடம்.பேசி
நாடகம் நடத்தினாள்
அவள் விழிகள் என்னிடம் காதல்
வசனம் பேசியது..""
நான் பிறந்ததில் இருந்தே இல்லாத
உணர்வு புதிதாய் என்னிடம்
பிறந்தது""
அவளிடம் பேச தொடங்கினேன்
இதுவரை எழுதபடாத அவள் இதய
புத்தகத்தில் எழுத
தொடங்கினேன்.""
எழுத தொடங்கியும்
முற்று புள்ளி வைக்காத
வார்தைகள்""
அவளிடம் பேசிய
வார்தைகளை தமிழ்
இலக்கியம்
தொலைத்துவிட்டதோ ""
என் பாட புத்தகத்தில் அவள் பாடம்
கூட்டபட்டது
அவளையும் படிக்க
தொடங்கினேன்.""
எத்தனை முறை படித்தாலும்
புதிதாய் படித்த அனுபவம்""
ஒரு பக்கத்தில்
மூன்றே எழுத்து ஒவ்வொரு எழுத்திலும்
ஒறாயிரம் உணர்வு.""
தொடரும்.;;;;;;;;;;;;;;;;;;;;;;
ஆக்கம்-பிரவீன்
காதல் தோல்வி
உயிரின் பிரிவு
வலியை நான்
உணர்ந்தது இல்லை""
அதை உணர்த்துவதுதர்க்காகத்தான்
என்னை பிரிந்து சென்றாயோ''
சிறு கதை
இது என் 4வது சிறுகதை"
நானே ஏழை குடும்பத்தை சேர்ந்தவன்"
அவளோ வசதி கொண்டவள்"
நாங்கள் ஒரு வருடமாக
காதலிக்கிறோம்"
நாங்கள் ஒருவருக்கு ஒருவர்
உயிருக்கு உயிராய் காதலிக்கிறோம்"
இன்று எங்கள் காதல் எங்கள் பெற்றோருக்கு தெரிந்துவிட்டது "
எங்களை பிரிக்கும்
இரு பெற்றோரை
விட்டு பிரிய
முடிவு செய்தோம்"
இன்று இரவு ஊரை விட்டு ஒடிபோக
முடிவு செய்தோம்"
இரவு வந்தது நாங்கள்
ஊரை விட்டு ஒடி செல்கிறோம்""
எப்படியோ இரு பெற்றோரும் எங்கள்
முடிவுகளை தெரிந்து கொண்டு நாங்கள்
பாதி ஊரை கடக்கும் முன்
எங்களை பிடித்துவிட்டனர்
ஒரு குடிசையில்
கட்டி விட்டனர்
எங்களை பிரிய
சொல்லி துன்
புறுத்தினர் "
எங்கள் முடிவை கடைசி வரை மாத்த முடியவில்லை"
எங்கள் பெற்றோர் கடைசியில்
எங்களை உயிரோடு எரிக்க
முடிவு செய்தனர் ""
நாங்கள் கத்தினோம் கதறினோம்"
அவர்களுக்கு மானம் தான் முக்கியமாய்
போயிற்று "
எங்களை உயிரோடு எரித்தனர்"
அந்த தீ விபத்தில் என் உயிர்
தப்பித்தது"
என்னவள் கருகி கிடக்கிறாளே"
நான் வேகமாக மீண்டும்
இறப்பதர்க்கு முயன்றினேன்"
கடைசி நோடியில் ஒரு குரல் நில் என்று சொல்கிறது யார் குரல்
அது என் காதலியின் குரல்""
ஆம் என் காதலியே தான்
குரல் என் எதிரே ஒலிக்கிறது "
என் உயிரை காப்பற்ற உருவம் இழந்தும் அவள் ஜிவன் என்னை சுற்று வருகிறது அவளிடம்
நான் வாழ்ந்து கொண்டிருக்கிறேன்
அவள் ஜிவனுடன்""
ஆக்கம்-பிரவீன்